Truth Never Fails

Thursday, December 19, 2019

வாய் உள்ள பிள்ளை பிழைக்கும்

 வாயால் வடை சுடுபவர்களுக்கு வான் உயர இடம் அளிக்கும் இந்தியா 


இது நாம் அறிந்த ஒன்றே 


அதே வேலையை தான் இந்திய இளம் Youtube பார்வையாளர்களும் செய்கிறார்கள்..


ஒரு செய்தி பார்த்து அல்லது புத்தகம் படித்து அல்லது சிறு தேடல் மேற்கொண்டு தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை..


யாரோ ஒருவர் வாயால் தப்பு தப்பாக சொல்ல அதை உண்மை என்று கேட்கிறார்கள்..


4 Google தேடல் மேற்கொண்டு 4 விக்கிப்பீடியா படித்தால் கூட ஒருவரின் வரலாற்றை கொஞ்சம் அறியலாம்..

ஆனால் அதை கூட செய்யாமல்


யாரோ ஒருவர் செய்யும் 10 நிமிட அரைகுறை செய்தி அடங்கிய (வரலாற்று ) பேச்சு (பேசும்) வீடியோவை பார்த்து உண்மை என நம்புகிறார்கள்..


ஆய்வு செய்யும் பழக்கம் இருந்தால் 

இப்படி நடக்காது

அயல் நாடுகளில் இந்த பழக்கமில்லை வாயால் வடை சுடுபவர்களுக்கு மதிப்பு இல்லை..


இங்கேதான் வாயால் வடை சுடுபவர்களை பிரதமர் பதவி கூட கொடுத்து அழகு பார்க்கிறார்கள்..


அலெக்சாண்டர் வரலாற்றை ஆய்வு செய்து எழுதுபவன், அனிமேஷன் மற்றும் ஆவண காட்சி படம் எடுப்பவன் .. மேற்கொள்ளும் சிரமத்தை விட..


இவர்கள் 5 நிமிடத்தில் வாயால் வாய்க்கு வந்ததை சொல்லி மக்கள் ஆதரவை பெற்று பணத்தை ஈட்டி விடுகிறார்கள்..


நான் அவர்களை தவறாக சொல்லமாட்டேன்..

அவர்களை நம்பும் முட்டாள் மக்களை தான் ஏளனமாக பார்க்கிறேன்..

Tamil india

Youtube Atrocities


Wednesday, November 6, 2019

Free Trade Tamilnadu

 Now Chennai becoming Geographic Centrality (for SEA,China,Japan,Russia, Australia)  Trade


But there is no political stability (No freedom for diplomatic decisions and lots of Scams making downfall )


And there is no ease of doing business (Indian political system over shadows state autonomy)


Free Tamilnadu Free Trade will lead to become next Singapore 


Krishna Kumar G

Friday, November 1, 2019

தமிழ்நாடு நாள்

 

Tamilnadu Naal

Karnataka Rajyotsava

Kerala Piravi

Pondy liberation day

But not Andhra formation day today

÷÷÷÷÷÷÷÷

மொழிவாரியாக சில மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாள்

××××××××

1 Nov 2021

தமிழ்நாடு நாள் தேர்ந்தெடுக்கும் முறை : 

முதன் முதலில் தமிழ்நாடு என்கிற பெயர் எங்கு ஒலிக்கப்பெற்றது 


அதன் காலம் என்ன 


சொல்லியது யார் 


எப்பொழுது அது வீரியமானது 


எப்பொழுது

சட்டமன்றத்தில் முன்மொழிய பட்டது


எப்பொழுது நிறைவடைந்தது/அதிகாரபூர்வமானது.


மாநிலமானதா / தனி நாடானதா ?


மாநில நாள் கொண்டாடுகிறோமா / 

நாட்டின் நாள் கொண்டாடுகிறோமா?


அல்லது ஒட்டுமொத்த (உலக) தமிழர்களுக்கென ஒரு நாள் கொண்டாடுகிறோமா


இப்படி பல கேள்விகள் என்னுள்..

Friday, September 13, 2019

முடிவு என்றாலே புது தொடக்கம் இருக்கும் : பொருளாதாரம்

 Global financial crisis recession 2008 உலகம் முழுவதும் பொருளாதார சரிவில் இருக்கும்போது சில நாடுகளுடன் இந்தியாவும் தப்பித்தது அதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது..அதில் ஒன்று..


உள்ளூர் வர்த்தகம் இந்தியாவை தாங்கிப்பிடிப்பதாக சொல்லப்பட்டது..


தற்போது அந்த உள்ளூர் வர்த்தகம் எங்கு சென்றது என்று கேட்க வேண்டாம்.


அது பணமதிப்பிழப்பில் அழிந்துவிட்டது என்று கூட சொல்லலாம்..


அல்லது மக்கள் சிறு வியாபாரிகளிடம் வாங்குவதில்லை என்றும் சொல்லலாம்..

(பெட்டி கடையில் சிகரெட் வாங்குவதல்ல உள்ளூர் விவசாய பொருட்களை வாங்குவது)


இது மட்டும் காரணமல்ல


 தற்போது நடப்பது 

நான் என்னும் அகங்காரத்தால் ஏற்படும் பொருளாதார சரிவு..


அதாவது 2008ல் உலக பொருளாதார சரிவில் இருந்து அடுத்த 10 ஆண்டுகளில் அந்தந்த நாடுகள் மீண்டதாக வைத்துக்கொள்வோம் .. (அமெரிக்க ,ரஷ்யா) 


2018ல் உலக வர்த்தகத்தை கைப்பற்றும் போட்டி தொடங்குகிறது 


வர்த்தக போர்..

ஈகோ அல்லது நான் என்னும் அகங்காரம்..


உலக வர்த்தகத்தை தன் கைக்குள் வைக்க துடிக்கும் நாடுகளின் போட்டி


(இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய தன் அடிப்படை பொருளாதாரத்தில் கை வைத்து இருந்தது சீர்திருத்தம் என்கிற பெயரில் அது பணமதிப்பிழப்பு,GST )


சிரியா போரில் பெரும் எண்ணெய் வளங்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் கைப்பற்றி தங்கள் வசம் இருப்பில் வைத்துக்கொண்டனர்..


அருகில் உள்ள ஈரானிடமும் எண்ணெய் வாங்கவும் தடை போட்டார்கள்..


இது ஒரு பக்கம் இருக்கட்டும்..


பெரும் வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் இருந்து யூரோவுக்கும் யுவானுக்கும் மாற்றினார்கள்..


அமெரிக்க டாலரை ஐரோப்பா ஆசியா முழுவதும் செயலிழக்க செய்தார்கள் 

(ரஷ்யா ,சீனா)


இப்படியான வர்த்தக போர் உச்சத்திலும் நாம் அனைத்து நாடுகளிடமும் பொருட்களை வாங்கிக்கொண்டு இருந்தோம்..

(நாம் அவர்களை காப்பாற்றிக்கொண்டு இருந்தோம்,ஆயுதங்கள் முதல் அனைத்தையும் அவர்களிடம் வாங்கி)


Make in India சீனாவில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்து இங்கு இறக்குமதி செய்யப்பட்ட செல்போன்களை இங்கேயே தயாரிக்க வாசல் திறந்தோம்..

(அதுவும் பெரிதாக பயனளிக்கவில்லை)


இங்கு புதிய கண்டுபிடிப்புகள் கிடையாது..

இருந்தாலும் அது ஒரு வெளிநாட்டு நிறுவனத்திற்காக கண்டுபிடிக்கிறார்கள்..


அப்படி கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகள் அல்லது பொருட்கள் இங்கு make in india கீழ் உற்பத்தி செய்யப்பட்டு இங்கையே விற்கப்படுகிறது....

அதன் லாபம் வெளிநாடுகளுக்கு சென்றுவிடுகிறது..


இப்படி அனைத்து பக்கமும் கப்பலில் ஓட்டை விழுந்து முழுகிக்கொண்டு இருக்கிறது 

இது நாம் போட்ட ஓட்டையா (விட்ட கோட்டையா) 

அல்லது வர்த்தக போரில் அனைத்து நாடுகளும்

சேர்ந்து நமக்கு போட்ட மொட்டையா (ஓட்டையா)

(நம்மை வைத்து ரஷ்யா,சீனா,அமெரிக்கா தப்பித்துள்ளது)


என்று ஆராய நேரமில்லை..


இந்திய பொருளாதார கப்பல் முழுகிக்கொண்டு இருக்கிறது..


இதை India recession 2019 என்று வைத்துக்கொள்வோம்..


இதிலிருந்து நீந்தி கரையேறி தப்பிக்க நினைத்தாலும்..


இந்திய ஆட்சியாளர்களின் அகங்காரம் இங்கே விளையாடுகிறது..

இந்திய பொருளாதார கப்பல் முழுகவில்லை அனைத்தும் நன்றாகவே உள்ளது என்று சமாளிக்கிறார்கள்..


கப்பல் முழுகாமல் இருக்க தன் கையை வைத்து ஓட்டையை அடைத்துக்கொண்டு இருப்பவர்களையும் விரட்டிவிட தொடங்கி இருக்கிறார்கள்..


பொருளாதார கப்பல் வேகமாக முழுகுகிறது..

அதில் நாமும் இருக்கிறோம்..


நம்மை தப்பிக்கவும் விடாமல் ஏற்பட்ட ஓட்டையை அடைக்கவும் விடாமல் ஆட்சியாளர்கள் (கப்பலை ஓட்டுபவர்கள்) விளையாடுகிறார்கள்..


இந்த சூழலில் என்ன செய்வது என்று தெரியாமல் கப்பலில் உள்ள சில தொழில் அதிபர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்..


இந்த அடக்குமுறை மேலும் நாட்டை பலவீனப்படுத்தும்..


என்னை கேட்டால் நட்பு நாடு என்கிற பெயரில் ரஷ்யா சீனா அமெரிக்கா போன்ற நாடுகள் இந்தியாவை 130 கோடி மக்களை அவர்களின் வர்த்தக திறனால் வைத்து செய்துவிட்டார்கள்..


÷÷÷÷÷÷÷÷÷


இந்திய பொருளாதாரத்தின் முடிவு 2019


முடிவு என்றாலே புது தொடக்கம் இருக்கும்   அது தொடங்கி வளரும் வரை கடினமாக உழைக்க வேண்டும்..


புதிய பொருளாதார கப்பலை கட்ட வேண்டும்..


பழைய பொருளாதார சூத்திரங்களை கைவிட்டு ..


இந்த புதிய பொருளாதார கொள்கையை வகுக்க இந்தியாவில் உள்ள தகுதியான ஆட்களை நாம் தேர்ந்தெடுக்க வேண்டும்..


இது காலத்தின் கட்டாயம்..


(Research and development in new Indian #Economy)


Krishna Kumar G

Wednesday, September 11, 2019

On that day towers ripped off

 A plane hit the world trade center it was an accident actual cause for this accident will be found after black box been recovered , 

People were been evacuated from this building fire fighters are trying to put off the fire..


Suddenly another plane hits the building 

And same reporter says.. and there is been  another accident.. another plane hits the next building.. wtc


After few mins news screen flashes Evacuate It's a Terrorist attack..


World watched this live 


Sep11 2001


(I was searching for the meaning of the word evacuate on Oxford dictionary)

Tuesday, August 27, 2019

வாழ்வில் மீண்டும் மீண்டும் நிகழும் நிகழ்வுகள்

 என் வாழ்வில் நடந்த 2 சம்பவத்தை பற்றி சொல்கிறேன்.. அதற்கு இடையே உள்ள தொடர்பு என்னை அடிக்கடி சிந்திக்க  வைக்கிறது..


11ம் வகுப்பு படிக்கும்போது என்  பைக்கில் நான்  செல்லும்போது என் தெரு முனையில் ஒரு சின்ன பயன் கத்திக்கொண்டே என் பின்னால் ஓடி வருவான்.. என்னிடம் நன்றாக பேசுவான்..


என் பள்ளியில் 2ம்,3ம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்தான் என நினைக்கிறேன்..


ஒரு நாள் +2 பள்ளி முடிந்து (special class) வெளியே வரும்போது அவன் பள்ளிக்கூட வாசலில் நின்றுக்கொண்டு இருந்தான்..


என்னடா வீட்டுக்கு போகலையா என்றேன்..

இல்லைனா ஆட்டோ வரல என்றான்..


சரி என் தெரு பையன் என்பதால் என் சைக்கிளில் ஏற்றுக்கொண்டேன்..


பின் கேரியரில் உட்கார பிடிக்கவில்லை நான் முன்னே பாரில் அமர வேண்டும் என்றான் ..


சரி  என்று அமர வைத்து 1 கிமீ சென்று இருப்பேன்..


திடீரென்று சைக்கிளின் முன் சக்கரத்தில் காலை விட்டுவிட்டான்..


பின் சக்கரம் மேலே தூக்கி என்னையும் சேர்த்து வீசியது..


இருவரும் சாலையில் விழுந்தோம்..


பின்னால் ஒரு பேருந்து வேகமாக வந்ததை பார்த்து. அவனையும் சைக்கிளுடன் இழுத்து ஓரமாக போட்டேன்..


அவன் கால் வெட்டி ரத்தம் வர தொடங்கியது..


உதவிக்கு அருகில் இருந்தவர்களிடம் உதவி கேட்டேன்..


யாரும் முன்வரவில்லை..எதிரில் சைக்கிளில் வேறு பள்ளியில் படிக்கும் என் நண்பன் ரத்தினக்குமார் வந்தான்..(இவனைப்பற்றி புறகு சொல்கிறேன்)


அவன் அவனிடம் இருந்த கைக்குட்டையை வைத்து கட்டு கட்டினான்..


அருகில் இருந்த ஒரு கடைக்கு அந்த பையனை தூக்கி சென்றேன்..

அந்த கடைக்காரரை அந்த பையனை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொன்னேன்..

அவர் உதாசீன படுத்தினார்..


நான் என் நண்பனை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு..

அருகில் 1 கிமீல் என் வீட்டுக்கு சென்று வண்டி எடுத்து வருவதாக சொன்னேன்..


சரி என்று..

வீட்டுக்கு சைக்கிளில் வேகமாக சென்று வண்டியை எடுத்துக்கொண்டு வரும் வழியில்..


அந்த பையனின் தாயார் அந்த பையன் வீட்டுக்கு வராமல் இருப்பதால் தெரு முனையில் காத்துக்கொண்டு இருந்தார்..


அவரிடம் விஷயத்தை சொன்னேன்..

நான் மருத்துவமனைக்கு அழைத்து செலப்போவதாக சொன்னேன்..


அவர் நீ பயப்படாத ..


நீ போய் அவனை முதல இங்க கூட்டிட்டு வா என்றார்..


அவர் சொன்னப்படியே வேகமாக சென்று அவனை கொண்டு வந்து சேர்த்தேன்..


பிறகு அந்த பையனை மருத்துவமனையில் சேர்த்தார்கள்..


காலில் எலும்பு முறிவு ஏற்றப்பட்டு அந்த பையன் கட்டுட்டுடன் இருப்பதை பார்க்கும்போதெல்லாம் மிக கஷ்டமாக இருக்கும்..


அந்த பையன் பெரு ஹரி.. ஹரிஹரன்


(பிறகு நான் அங்கிருந்து வீடு மாறிவிட்டேன்)

++++++

பிறகு 10 ஆண்டுகள் கழித்து ஒரு பெட்ரோல் பங்கில் 

ஒரு பையன் வந்து அண்ணா எப்படி இருக்கீங்க என்றான்..


எனக்கு அந்த பையன் யாருன்னே தெரியல..


பிறகு அவன் தான் ஹரி உங்க தெருவுல இருந்தேன் என்று சொல்ல..


நான் வேறு எதுவும் பேசவில்லை வண்டியை நிறுத்திவிட்டு அவன் காலை பிடித்து பார்த்தேன்..


அவன் என்ன பண்றீங்க..என்ன பண்றீங்க

என்று 

அதுலாம் அப்பவே சரியாகிடுச்சி என்றான்..


இருதாலும் அவன் காலில் சிறு தழும்புகள் இருந்தை பார்த்தேன்..


அவனிடம் sorry டா என்றேன்..

அவன் என்னனா இப்படி பண்றீங்க என்றான்..


(பிறகு ஒரு திருமனத்தில் அவன் என் நண்பனின் உறவினர் என்பது தெரிந்தது (அதைப்பற்றி பிறகு சொல்கிறேன்) )


(என்னடா பிறகு சொல்கிறேன் என்று எண்ண வேண்டாம்,இந்த கதைக்குள் தொடர்பு நிறையவே உள்ளது அதுமட்டுமல்ல அவைகளை சொன்னால் இது பெரிய பதிவாக சென்றுவிடும் என்பதால்..)

++++++

தற்போது 2019 மே எனக்கு நடந்த விபத்தில்


என்னை இடித்த நபரின் பெயர் ஹரி,.. ஹரிஹரன்..


அவனுக்கும் காலில் மட்டும் தான் அடி..

அதேப்போல்..


÷÷÷÷÷÷


இது ஜோசியம் அல்ல..


+2 படிக்கும்போது கைக்குட்டையை வைத்து கட்டுகட்டிய என் நண்பன் ..

ரத்தினக்குமார்

தற்போது ஒரு ஆண் செவிலியர்..


என் தந்தை அப்போலோ மருத்துவமனையில் இருந்தபோது அவன் தான் அவ்வப்போது பார்த்துக்கொண்டான்..

(அப்போது அப்போலோவில் செவிலியராக வேலை செய்துக்கொண்டு இருந்தான்)


 10 ஆண்டுக்கு முன்பு ஒரு கட்டத்தில் என் அப்பாவும் அம்மாவும் வெவ்வேறு மருத்துவமனையில் இருந்தார்கள்..(NLC GH to CMC வேலூர்)

நான் வேலூருக்கும் நெய்வேலிக்கும் தினமும் சென்றுக்கொண்டு இருந்தேன்..

8 மணி நேர பயணம் அது..


அப்போது அவன் வீட்டில் இருந்து தான் எனக்கும் மருத்துவமனையில் இருந்த என் அப்பாவுக்கு ஒரு 10 நாட்களுக்கு உணவு கொடுத்தார்கள்..


இதை நான் அவர்களிடம் கேட்டு பெறவில்லை..

அவர்களாகவே கட்டாயப்படுத்தி செய்தார்கள்..

(மிக நல்ல குடும்பம்)


அவன் தற்போது என் முகநூலில் இல்லை தொடர்பிலும் இல்லை..


ஆனால் எனக்கு விபத்து நடந்து நான் மருத்துவமனையில் இருந்தபோது என் தம்பிக்கு கால் செய்து இருந்ததாக சொன்னான்..

(என்னை மேல் சிகிச்சைக்கு பெங்களூர் அழைத்து வர சொன்னதாக சொன்னான்)


தற்போது வரை இப்படி பல விஷயங்களில் உதவிய நண்பர்கள்க்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்..


ஏதோ தொடர்பு நம்மை தொடர செய்கிறது

அன்பை பகிர்தலில்..


நான் இந்த பதிவை தொடங்கியதுக்கும் முடித்ததுக்கும் தொடர்பு இல்லை..


ஒருவேளை இருக்கலாம்..


Krishna Kumar G

Friday, April 12, 2019

அரசு பணிக்கு தமிழ் போதும்

 தமிழக தொல்லியல் துறையில் 35 பணி இடங்களில் 25 காலியாக உள்ளது ஏன் தெரியுமா ? 


இதற்கு கல்வி தகுதி :― சம்ஸ்கிருதத்தில் பட்டம் பெற்று இருக்க வேண்டுமாம்..


இந்த விவகாரம் மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு சென்றது..


நீதிபதி ஆதிச்சநல்லூரில் தமிழ் பிராமி எழுத்துகளே உள்ளதால்..

தமிழில் பட்டம் பெற்று இருந்தால் போதும் என்று குறிப்பிட்டுள்ளார்


(தமிழ்நாட்டு அரசு வேலையில் சமஸ்கிருதமா ?)


இம்மா நாளு என்னடா ஆட்சி பன்னீங்க ?


கார்பன் டேட்டிங்கில் தமிழ் வென்றது.. இல்லை என்றால்.. இப்படி ஒரு தீர்ப்பு கிடைத்து இருக்குமா ?


இனி எந்த வேலையிலும் சமஸ்கிருதம் தகுதியாக கருத கூடாது.. (கோவில் அர்ச்சகர் வேலை உட்பட)


#தமிழ் #Tamil #Language #Government #அரசாட்சி


Krishna Kumar G

Monday, April 8, 2019

What not to do in Tamilnadu

1. Don't smoke and drink in public places, It's illegal.(May lead to fine)
2. Don't do prank shows, its illegal (May lead to jail)
3. Don't talk against tamil language, You will be get attacked by locals.
4. Don't litter on streets, It's illegal (10$ to 200$ fine)
5. Tamilnadu people are good in political conversation, So don't talk politics unless you can bare the unwanted conversation.


More updates soon

#Tamilnadu

@krishna kumar g

Thursday, April 4, 2019

More Conservative than the real

வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள்
இந்தியாவில் வாழும் இந்தியர்களை விட மிக பழமைவாதிகளாக உள்ளனர்..

They are Time struck
At the time they left India

(Irish live in abroad are more Irish than the real Irish live in homeland ) (Change Irish into Indian)

(Use Internet and do little bit research on Google, Check India is been modernized more than your thoughts you hold on your mind while you left India.)

#blog

Krishna Kumar G

Monday, February 18, 2019

Patriotism has been used for political and individual gain

Many RSS and it's related parties are using patriotism as an excuse to hunt Kashmiri people .
Same method has been used against tamil people by non tamil language speakers in past 30 years.(after rajiv assassin)

Patriotism is not meant only for a party, group, caste or religion.

Don't try to make patriotism as your vote bank.

Here in India religion is been used for patriotism for past 70 years.. after partition

But this is a wrong method to express patriotism..

Real patriot is different
Who things and works for the welfare and unity of the people.

Meanwhile person who things to divide and rule the people by using #patriotism is not the real #patriot..

#politics

Krishna Kumar G

Tuesday, February 5, 2019

மக்கள் வழிகாட்டி கையேடு

'தமிழக அரசின் மக்கள் வழிகாட்டி' Guide ஒன்று தயாரிக்க வேண்டும்.
எந்தெந்த பிரச்சனைகளுக்கு எந்தெந்த அலுவலகத்தை நாட வேண்டும்,
எந்த அதிகாரியை சந்திக்க வேண்டும்,
எவ்வளவு பணம் செலுத்த வேண்டும்..

உதாரணத்துக்கு

பத்திர பதிவு செய்வது எப்படி
பட்டா வாங்குவது எப்படி

தெரு விளக்கு எரியவில்லை என்றால் எங்கு புகார் செய்ய வேண்டும்..
(மாநகராட்சி,நகராட்சி,ஊராட்சி,கிராமம். )

வீட்டில் குழந்தை பிறந்தால்
எங்கு பதிய வேண்டும்.
மருத்துவமனையில் குழந்தை பிறந்தால்..
எங்கு பதிய வேண்டும்..

வீட்டு வரி,தண்ணீர் வரி எங்கு கட்டுவது..?

அந்தந்த அலுவலரின் பணிகள் என்ன?

ஒரு குறிப்பிட்ட துறையை சேர்ந்த அலுவலர் பணி செய்யாமல் தட்டி கழித்தால்.. அவரை எப்படி பைபாஸ் செய்து .. வேலையை முடிப்பது..

அரசின் திட்டங்களின் செயல்பாடுகளை எப்படி எல்லாம் cross check செய்வது..

துறைகளின் இணையதள முகவரிகள்

இப்படி மக்களிடம் அன்றாடம் தோன்றுகிற கேள்விகளுக்கு பதில் தரும்படியாக..

ஒரு புத்தகத்தை அச்சிட வேண்டும்..
இணையதளத்திலும் பதிய வேண்டும்..

ஒட்டுமொத்த அரசின் சிஸ்டத்தையும் ஒரு கையெடுக்குள் கொண்டு வர தவறி இருக்கிறோம்..

(இதுவே ஊழல் நடப்பதற்கான பெரிய வழியாகவும்  இருந்து வருகிறது)

(இதை வைத்து அரசியல் செய்வதற்கான வழியாகவும் உள்ளது)

(ஏற்கனவே அரசின் இணையதளங்களில் உள்ள தகவல்கள் போதுமானதாக இல்லை)

(ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒருமுறை புதிய கையேடு விட தொடங்க வேண்டும்)

#Politics #Governance #Tamilnadu

Krishna Kumar G

Monday, January 28, 2019

புது பென்சன் திட்டம்

 CPS திட்டம் வரும்போதே பலர் எதிர்த்தார்கள்,அதில் உள்ள ஒரே தவறு,அதில் உள்ள பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வார்கள் என்பதே.. 

வந்தா லாபம் போனா மயிரு


என்கிற அடிப்படையை தாரக மந்திரமாக கொண்டு,கொண்டுவரப்பட்டதே CPS எனப்பாடும் 

Contributory pension scheme.


பங்கு சந்தை என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சூதாட்டம்..


உதாரணத்துக்கு மங்காதாவில் அரசு ஊழியர்களின் பென்சன் பணத்தை வைத்து சூதாடுவதைப்போல..


இது இந்தியா முழுவதும் உள்ள எல்லா அரசு துறைகளிலும் உள்ளது..

××××××


என் கருத்து என்னன்னா இனி பணியில் சேர்பவர்களுக்கு முழு சம்பளத்தையும் கையில் கொடுத்துடுங்க..

அவங்களுக்கு எந்த பென்ஷன் திட்டத்தில் விருப்பமோ..

அங்க அதில் நேரடியாக பணத்தை செலுத்தி பயனடையட்டும் ...


(குறிப்பு இனி அரசு பேஷன் திட்டத்தை செயல்படுத்த கூடாது)


LIC,HDFC ,ICICI பென்ஷன் திட்டங்களில் சேர்ந்துகொள்ளட்டும்..


(இப்படி தான் ஒரு அரசு நிறுவனத்தில் அதன் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை கையில் கொடுக்க வழியில்லாமல் வங்கிகளில் ஆயுட்கால fixed டெபாசிட் செய்துவிட்டார்கள்.. அதிலிருந்து மாதம் மாதம் வட்டி மட்டுமே அவர்கள் கைகளில் கிடைக்கும்.. முழுபணமும் கிடைக்காது.. அந்த உரிய நபர் இறந்த பிறகே அவரது வாரிசுகளுக்கு முழு பணமும் கிடைக்கும், இதுபோல் வங்கிகளிடம் பேசி ஒரு வழிக்கு வரலாம் )


Idea 2:

(இதுவரை cps வழியாக உங்களிடம் பிடித்த பணம் என்று ஒரு demat கணக்கிற்கான பாத்திரத்தை அரசு ஊழியர்களின் கையில் கொடுத்துவிடுங்கள்.. ஆனால் நீங்கள் இதை பணி ஓய்வு பெறும் வரை எடுக்க முடியாது... என்று ஒரு வரையறை வையுங்கள்.. பின்பு நமக்கு நம்ம பணம் கிடைச்சிடும் என்கிற உத்தரவரம் அவர்களுக்கு கிடைத்துவிடும்..

இனி அவங்களாச்சி வங்கியச்சி.. ஆக அரசுக்கு தொடர்பே இல்லாமல் போய்விடும்)


#Tamilnadu #Governance 


Krishna Kumar G

Wednesday, January 23, 2019

சிறுதெய்வ வழிபாடு வரலாற்று நாயகன் வழிபாடு

 மதுரை வீரன்


தமிழ் தெய்வ வழிபாட்டை சிறு தெய்வ வழிபாடு என்று சொல்லிவிட்டார்கள்..


அப்போ பெரு தெய்வ வழிபாடு என்னான்னு கேட்டா 

சமஸ்கிருத தெய்வ வழிபாடு என்கிறார்கள்..


இது என் பாட்டி (அம்மா வழி) வீட்டில் எடுத்த புகைப்படம்..


அங்கு மதுரை வீரன் தான் முக்கிய தெய்வம்..


(தாய் வழியில் குல தெய்வ வழிபாடு பொருந்தாது என்பதால் நான் இவ்வளவு நாட்கள் இதை கவனிக்கவில்லை)


{தந்தை வழியில் புத்துப்பட்டு அய்யனார் (புதுவை அருகே உள்ள ஊர்) (ECR)}


இவையெல்லாமே தமிழ் தெய்வ வழிபாடுகளின் கீழ் வரும்..


 சமஸ்கிருத தெய்வங்களை வழிபாடுபவர்கள் இவைகளை சிறு தெய்வம் , அதாவது இவைகள் எங்கள் தெய்வங்களுக்கு கீழ் சிறு தெய்வங்களாக உள்ளது என்று ஒரு மாயை வரையறையை உருவாக்கி வைத்துள்ளார்கள்..


×××××


மதுரை வீரன் கதை உங்களுக்கு தெரிந்து இருக்கும்..

அதுவும் வரலாற்றில் பதியப்பட்ட ஒரு சாதிய கொலை தான்...


×××÷÷


இங்கு தமிழ் தெய்வம் என்று சொல்லப்படுவது அவதாரங்கள் அல்ல.. அது முன்பு வாழ்ந்து மறைந்த ஒரு வரலாற்று நாயகனை நினைவு கூறும் ஒரு நிகழ்வே வழிபாடாக கருதப்படுகிறது..


÷÷÷÷

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.


#Religion #Tamil 


புகைப்படத்தின் கீழ் ஒரு சாட்டை உள்ளது பாருங்கள்..

அது நான் சிறு பிள்ளையாக இருந்த போதில் இருந்து பார்க்கிறேன்..


Krishna Kumar G


Saturday, January 19, 2019

சிங்கள போர் சிகிச்சை

 10 ஆண்டுக்கு முன்பே இதே மாதம் அப்போலோ மருத்துவமனையில் கழிந்தது.. 


ஈழத்தில் நடக்கும் போர் பற்றி சரியான செய்தியோ தகவலோ தெரியாமல் இருந்தேன்.

2G GPRS மொபைல் வழியாக lankasri இணையதளத்தில் வரும் செய்திகளை படிப்பேன்..


ஒரு நாள் இரவு 10 மணிக்கு மேல் மருத்துவமனைக்கு திரும்பினேன்..


முன் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. 

(ஜெயா இருந்த போது எப்படி இருந்ததோ அப்படி)

எப்போதும் திறந்தே இருக்கும்..


ஆனால் அன்று மூடி இருந்தது..


அடையாள அட்டையை காட்டி வாசல் கதவு வழியாக நுழைந்தேன்..


ஆனால் மெயின் ப்ளாக் கதவு பூட்டப்பட்டு இருந்தது..

ஆள் நடமாட்டமே இல்லை..

வாசலில் ஒரு vip கார் கூட இல்லை.. 


சரி emergency வழியாக உள்ளே செல்லலாம் என்று சென்றேன்..


வழக்கமாக 4-5 ஆம்புலன்ஸ்கள் நிற்கும் ஆனால் அன்று ஒரு சுமோ கார் 

ஒரு கட்சி கொடியுடன் நின்றது..


அங்கும் ஆள் நடமாட்டமில்லை..


கதவை திறந்தேன்.. நேராக 4 லிப்ட் இருக்கும் ஆனால் இன்னும் அதற்கு 2 கண்ணாடி கதவுகளை திறக்க வேண்டும்.


அதுவும் பூட்டப்பட்டு இருந்தது..


சரி என்று இடதுபுறம் இலவச STD போன் ஒன்று இருக்கும் ..


அதன் அருகே சிறு கதவு இருக்கும்.. அதை திறந்தால் ஒரு சிறு அறை வரும் அதை தாண்டினால் மெயின் ப்ளாக் லாபி செல்லலாம்..


அதை திறந்தேன்.. 


அதிர்ச்சி ..இருட்டில்


50க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள்..

(உடை காட்டிக்கொடுத்தது)


பெட்டி படுக்கையுடன்.. சிலர் துணி முட்டையுடன் தரையில் அமர்ந்திருந்தனர்..

சிலர் சேறு காய்ந்த உடையுடன் இருந்தார்கள்..


என்னை எல்லாரும் பயத்துடன் பார்க்க எனக்கு பயம் வந்துவிட்டது..


சில இலங்கை இராணுவ வீரர்களும் இருந்தார்கள்..


கடகடவென கடந்து மெயின் லாபி வந்தேன்..


மெயின் லாபியில் யாருமே இல்லை..

இரவிலும் பரபரப்பாக இருக்குமிடம்.. ஒரு காபி ஷாப் இருக்கும்.. அதுவும் மூடி இருந்தது..

பார்மஸியும் மூடி இருந்தது..


லிப்ட் வேலை செய்யவில்லை..

அதை சுற்றி இருக்கும்

Slope வழியாக மேலே ஏறினேன்..

......


என் மண்டையில் ஓடியதெல்லாம்..

இலங்கையில் என்ன செய்தி என்பது தான்..


பலரை தொலைபேசியில் அழைத்து..

செய்தி பார்த்தீங்களா இலங்கை பற்றி ஏதாவது செய்தி இருக்கா என்று தொடர்ந்து கேட்டேன்..


எல்லாருமே ஒன்றுமில்லை என்றார்கள்..


மொபைல் செய்திகளில் தேடினேன்..அதிலும் ஒன்றுமில்லை..


நடந்ததை என் அப்பாவிடம் சொல்லிவிட்டு..


தூங்கிவிட்டேன்..


காலை எழுந்து வந்து ..கீழே பார்த்தேன்..


வழக்கம் போல் மருத்துவமனை இயங்கிக்கொண்டு இருந்தது..


எந்த தடயமும் இல்லை..

=======


வெளியே நின்ற அந்த ஒரு சுமோ வண்டி..

அதில் இருந்த அரசியல் கொடி..


யார் என்று சொல்லனுமா ?..


யார் யார் போரில் காயமடைந்து உயர் சிகிச்சை பெற சென்னை கொண்டு வரப்பட்டார்கள் ?


இவையெல்லாம் இரவில் நடந்தது..


எந்தெந்த கட்சிகள் இதற்கு உதவி செய்தது.?


÷÷÷÷÷


(ஏற்கனவே இந்த பதிவை சில ஆண்டுகள் முன்பு பதிவு செய்தேன்.. பிறகு அழித்துவிட்டேன்..

தற்போது 10 ஆண்டுகள் கடந்துவிட்டது.. )


(ஈழ போர் உச்சத்தில் இருந்த நேரம்)


#blog #Tamil #Srilanka 2009 to 2019


Krishna Kumar G

Friday, January 11, 2019

சித்தா நீ என்ன பித்தா ?

 சித்தர்கள் சமண ஆசிரியர்கள் :- பல துறைகளில் பல போதனை முதல் அதன் செயல்பாடுகள் வரை கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருந்தார்கள்.. 


இந்த சித்தர்களை அழித்தால் நாம் நம் ஆரிய கருத்தை உள்ளே திணிக்கலாம்..

என்கிற அடிப்படையில் சித்தர்களை கழுமரம் ஏற்றினார்கள்.. (சித்தரவதை)


சித்த நூல்களிலும் தங்கள் கருத்தியலை திணித்து..ஆரிய நூலாக மாற்றினார்கள்..


சித்தர்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுத்தார்கள்..

குலக்கல்வி முறை என்பது அவர்களிடம் இல்லை..


ஆரிய வருகைக்கு பின்பு..

குலக்கல்வி முறை வந்து.. ஒரு சாதிக்கே கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது..


அந்த காலகட்டத்தில் சித்தர் போதனைகள் அழிய தொடங்கியது..


முகலாய வருகைக்கு பின்பு தான்..

மக்கள் குழப்ப நிலைக்கு வந்தார்கள்..

ஆங்கிலேயே வருகைக்கு பின்பு 

முற்றிலும் குழம்பினார்கள்..


இந்த குழப்பத்தால் குலக்கல்வி அழிக்கப்பட்டது அதன் நீட்சியாக ஆரியர்களும் தற்போது சித்தர்களை வழிபடுகிறார்கள்..


தற்போதுள்ள சித்த போதனைகள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் எஞ்சி இருப்பவை.. (சித்த வைத்தியம் ..)

சித்தர்கள் கற்றுக்கொடுத்த இசை வடிவம் முற்றிலும் அழிந்துவிட்டது.. காரணம் அதன் தொடர்ச்சி இல்லாமை..


(உங்கள் சித்தம் தெளிந்தால் சரிதான்)


வரலாறும் அதை தான் சொல்கிறது..


இன்று போய் திருவண்ணாமலையில் சித்தர்களை தேடுகிறான்..

இருந்தால் தானே கிடைப்பான்..

அவனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கழுமரம் ஏற்றிவிட்டார்கள்..


தற்போது ஆரியமும் சித்தர் முறையும் கலந்துவிட்டது.. ஹிந்து என்கிற பெயரால்..


எந்த சித்தராவது 

சமஸ்கிருதத்தில் பேசியுள்ளார்களா?


சித்தர்கள் தமிழ் மொழி பேசியவர்கள்..

சமஸ்கிருத வழிபாட்டுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லை..


அவர்களை அழித்ததே சமஸ்கிருத வழிபாட்டு முறைகள் தான்..


இன்று இரண்டும் கலந்துவிட்டது...


சித்தா மருத்துவ கல்லூரி உள்ளது

National Institute of Siddha

அதை மேலும் விரிவுபடுத்தி பல துறைகளை உருவாக்க வேண்டும்..


சமஸ்கிருத கலப்பில்லாமல் pure சித்தர் முறைகளை (போதனைகளை) தேடி எடுக்க வேண்டும் அல்லது சமஸ்கிருதத்தில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும்..


சித்த வைத்தியம் = தமிழர்(தமிழ்) வைத்தியம் 

சித்தர் பாடல் = தமிழ் பாடல்


சித்த மதம் = தமிழ் மதம்


சமஸ்கிருதத்தில் அர்ச்சனை எதற்கு ?


நவபாசானம் என்பதை எவன் உருவாக்கினான்..

அதில் உருவான சிலைகளுக்கு சமஸ்கிருத அர்ச்சனை செய்ய அவன் யார்?


சித்தர் உருவாக்கிய மூலிகை சிலைகளுக்கு..

தமிழில் தான் பாடல்கள் ஒலிக்கப்பட வேண்டும்..


நான் எதைப்பற்றி சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்..


இன்று சித்தர் என்றால் ஹிந்து என்கிறார்கள்..

சித்தர் காலத்தில் ஏது ஹிந்து என்கிற வார்த்தை..


#tamil #religion 


Krishna Kumar G