Truth Never Fails

Friday, September 14, 2018

இரட்டை வேடம் போடும் அகஸ்தா

  இப்படியும் ஒரு கட்டு கதை இருக்கு..

சிவனின் உடுக்கையில் வலது புற ஓசை சமஸ்கிருதம் இடது புற ஓசை தமிழ் என்றும், சிவன் அகத்தியருக்கு தமிழ் கற்றுக்கொடுத்து தென் மாநிலங்களுக்கு அனுப்பியதாக 

ஒரு கட்டுக்கதை ஒன்று உள்ளது..


இந்த கதைக்குள் புனையப்பட்ட மற்றொன்று வர்ம கலை களரி சித்த வைத்தியம் இன்னும் பல அகத்தியரால் உருவாக்கப்பட்டது என்று..


இதைவிட கொடுமை இராமர் என்கிற இராமபுரான நாயகன் அகத்தியரிடம் உபதேசம் பெற்றதாகவும் உள்ளது..


அப்போ அகத்தியரின் timeline மிக பெருசா இருக்கே என்றால்..


அவருக்கு சாவே கிடையாது என்றும்..

அவருக்கு Time travel தெரியும் என்று ஒரு குரூப்பும்..


சொல்லிவர..


ஒட்டுமொத்த கணிப்பில்..


அகத்தியர் என்கிற ஒருவரை எல்லா இடத்திலும் பொருத்தி எவனோ திட்டமிட்டு சதி செய்துள்ளான் என்பது மட்டும் புரிகிறது..


 காரணம் அகஸ்திய முனி என்கிற ஒருவர் சமஸ்கிருத வேத புத்தகத்தில் வருகிறான்..


அவரை அப்படியே தூக்கி கொண்டு வந்து தமிழ் நூல்கள் கலைகளை உருவாக்கியவர் என்று பொருத்தி இருக்கிறார்கள்.. 


தொல்காப்பியரே அவர் மாணவர் தான் என்று சொல்லி..


தமிழே சிவனால் வந்தது என்றும் சொல்லி வைத்துள்ளார்கள்..


இதிலிருந்து என்ன தெரிகிறது..

 எவனோ ஒருவன் தான் இதை செய்துள்ளான்..


மிக பெரிய கிரிமினல் அவனாக தான் இருப்பான்.. ஒரு வரலாற்றையே மாற்ற முயன்றுள்ளான்.. 


பல ஆண்டுகளுக்கு பிறகு அவன் சமஸ்கிருதத்தையும் தமிழையும் கற்ற ஒருவன் தான் என்பதை மட்டும் தான் என்னால் கண்டுபிடிக்க முடிகிறது.. 


நல்லவேளை ஆசீவகம், சமணம் பற்றிய குறிப்புகள் இன்னமும் உள்ளது..


#blog #tamil #religion


Krishna Kumar G





Tuesday, September 11, 2018

திணை சமன்

 திணைகளை பற்றி ஒருசில தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் பேசும்போது..

அந்தந்த திணை நிலங்களின் மக்களை சாதியாக பிரிக்கிறார்கள்..

அந்த திணையில் வாழும் சாதிகளுக்கு உரிய கடவுள் என்று ஹிந்து கடவுள்களின் பெயர்களை தமிழ் கடவுள் என்று குறிப்பிட்டு சமன் செய்கிறார்கள்..

இது தவறு..



ஆக திணை நிலத்தை குறிக்கும் என்பது சரி தான் 

ஆனால் கடவுளும் சாதிகளும் பிறகு விளக்கம் எழுதியவர்களால் இணைக்கப்படுகிறது..

ஒரு திணையில் ஆயிரம் கூட்டம் இருப்பார்கள் அவர்களுக்கு ஆயிரம் தெய்வங்கள் இருப்பார்கள்.

அதே திணைகள் காதலையும் காமத்தையும் குறிப்பதை பலர் குறிப்பிட தவறுகிறார்கள்..


#blog #tamil #religion


KRISHNAKUMAR

Tamil Coders Club

 விக்கிப்பீடியா: திருக்குறள் பக்கத்தில் ஹோலி (புனிதம்) குறள் என்று உள்ளது..

அதை நான் நீக்கி விட்டேன்..

நீங்களும் நீக்குங்கள்..


திருக்குறள் புனித நூல் அல்ல..

புனித குறள் என்று அதை அழைப்பது சதி.


எவனோ இதை திட்டமிட்டு செய்துள்ளான்..


அடுத்தது விட்டால் Hindu holy script என்று எழுதிவிடுவான்..


இப்படித்தான் ஒவ்வொரு தமிழ் சங்க கால இலக்கியங்கள் களவு போகிறது..


டிஜிட்டல் உலகில் உள்ள தவறுகளை அழியுங்கள்..


இதற்கான freelancer குழுக்களை உருவாக்குங்கள்..


Code படிச்சவன் கொஞ்சம் தமிழுக்கு வேலை செய்யுங்கள்..


தமிழ் coders என்கிற கிளப்களை உருவாக்குங்கள்..


கட்சிக்கு வேலை செய்வதை நிறுத்துங்கள்.. கொஞ்சம் தமிழுக்காக வேலை செய்யுங்கள்..

(10 காசு தேறாது, பணம் பதவியை எதிர்பார்க்காதவர்கள் மட்டுமே ஈடுபடவும்)


#blog #wiki


Krishna Kumar G







Monday, September 3, 2018

Love is not option

 காதல் வேறு திருமணம் வேறு என்கிற பழக்கம் இந்தியாவில் உள்ளது.

காதலே ஒரு உறவு தான் திருமணம் அதன் சடங்கு அவ்வளவு தான்..

நான் இங்கு சொல்வது இருதலை காதலை..

Love is also a relationship

Marriage is also a relationship

Love is not just time pass for needs

And marriage is not only real relationship.

Both are same

Marriage is just a ritual symbol and that's not mean it's only the true love. (only for Indian Marriages)


காதலை time பாஸ் என்று செய்யவே கூடாது..


அது இன்னொரு மனதை கொல்லும் செயல்..


ஒருவருடன் காதலில் இருக்கும்போது இன்னொருவரிடம் காதல் கொள்வதும் தவறு..(Cheating)

முறையாக பிரேக் up செய்துவிட வேண்டும்..


இதில் காமத்தை பற்றி பிறகு சொல்கிறேன்..

இதனுடன் சேர்த்து சொன்னால் குழம்பி விடுவீர்கள்..


கள்ளக்காதலை தடுக்கும் வழிகள் என்று ஏதுமில்லை..


அதை புறக்கணிக்க முடியவில்லை என்றால் விவாகரத்து என்று ஒன்று உள்ளது.

ஒரு உறவை முறையாக முடித்துவிட்டு இன்னொரு உறவை நாடுங்கள்..


இங்கு முடித்துவிட்டு என்றால் கொலை செய்துவிட்டு என்று பொருள் அல்ல விவாகரத்து செய்துவிட்டு என்று பொருள்..


ஆனால் காதலில் விவாகரத்து என்று ஒன்று இல்லை.. அது சட்டத்துக்கு அப்பாற்பட்டது..

ஒருவருக்கு நான்கு காதல் கூட அமையலாம்..

அவையெல்லாம் வெவ்வேறு கால கட்டத்தில் அமைந்தாலும் அல்லது ஒரே நேரத்தில் அமைந்தாலும் முன்னாள் காதலை முறையாக கைவிட்ட பின்பே அடுத்த காதலை நாட வேண்டும்..


இதை சட்ட ரீதியாக கண்காணிக்க யாருமில்லை தான் ஆனால் இதில் ஒரு வகை ஏமாற்றம் அடையும் இன்னொரு மனம் உங்களை சும்மா விடாது..

உலகின் நீதியும் சும்மா விடாது..


If you're in illegal affair 

If married get divorce legally

In love give a break up

(For current relationship) 


(I don't want to say about sex or one night stand at this time because it may confuse or divert you {for India})


Advice from a single

#blog


Krishna Kumar G