Truth Never Fails

Saturday, May 4, 2019

வர்ணாசிரமத்தில் பெண்கள்

வர்ணாசிரமத்தில் பெண்களுக்கு இடமில்லை 100%,

பெண்களை தொழில் ரீதியாக சனாதனம் பிரிக்கவில்லை. ஆண்களை மட்டும் தான் வர்ணாசிரமம் பிரித்தது,
அந்த ஆணை சார்ந்த பெண் அவனவன் வர்ணத்தில் பொருந்திக்கொண்டாள்..

அவளுக்கு பூணூல் கிடையாது
அர்ச்சகராக உரிமை கிடையாது

பெண்ணை ஒரு தீட்டான பொருளாகவே வைத்திருந்தது..

குறிப்பாக விதவை கோலம் புகுந்துவிட்டால்.. அவள் கதை அதோடு முடிந்தது..

வர்ணமில்லா உடை உடுத்தி மொட்டை அடித்துவிடுவார்கள்..

இதுவே சிறந்த உதாரணம் பெண்கள் சனாதன வர்ணாசிரமத்தின் படி வர்ணமாற்றவள்..

சாதி அற்றவள் பெண்..
இன்றைய ஹிந்து மதத்தில்..
அவளால் தர்ப்பணம்,யாகம் எதுவும் செய்ய முடியாது..

அவள் ஆணுக்கு சுகம் கொடுத்து பிள்ளை பெற்றெடுக்கும் ஒரு கருவி மட்டுமே..

வேறு எந்த உரிமையும் அவளுக்கு இல்லை..
?÷÷÷÷÷?

சும்மா லஷ்மி சரஸ்வதி.. பார்வதின்னு கதை விடுவார்கள்..

நிஜத்தில் இது தான் அடிப்படை..

÷÷÷÷÷÷

ஆனால் இன்றைய புது யுகத்தில் பெண்கள் பல தொழில் புரிகிறார்கள்..

சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே சாதி அவர்களை தொடர்கிறது..

அதுவும் திருமணத்தால் வர்ணத்தை மற்ற முடியும்..

பெண்ணுக்கு வர்ணம் நிறந்தரமல்ல சொந்தமுமல்ல..

÷÷÷÷

ஒரு பெண் தன் வாழ்நாளில் 4 ஆண்களை வெவ்வேறு சாதிகளில் திருமணம் செய்தால்
4 வர்ணத்திற்கு மாறலாம்..

4 வர்ண பிள்ளைகளை பெற்றெடுக்கலாம்..

÷÷÷÷÷

So வர்ணம் என்பது பொய்யடா..

அது கலவைகளால் ஆன மாயையட

இதுவே மெய்யடா..

#NoCaste #caste #Hindu #religion #Women #blog

(Edited 4 May 2020)

இந்த பதிவை கொஞ்ச நாள் முன்பு தேடினேன்
.
காரணம் ஒரு வட இந்திய பெண்ணின் பெயர் xy pandit என்று முடிந்தது..
(அதை பார்த்து வியந்தேன்)

ஒரு பெண் எப்பொழுது பண்டிதராக இருந்தாள்
என்கிற கேள்வி என்னுள்
(தன் முப்பாட்டன் பண்டிதர் என்றால் 50வது தலைமுறையும் பண்டிதரா? )

சாதி என்பது செய்யும் தொழில் தானே..

ஜான்சி ராணியே விதவை பென்ஷனுக்கு போராடியவர் தானே..
அந்த பெண்ணையே இவர்கள் வீரர் என்கிறார்கள் என்றால்

மொட்டை அடித்து வீட்டின் திண்ணையில் கிடந்த பெண்களை எவ்வாறு நடத்தி இருப்பார்கள்..

பெண்கள் முதலில் சாதிய சடங்கில் இருந்து வெளியேற வேண்டும்..

சாதியால் பெருமைப்படும்படி உங்களுக்கு எந்த மூலையிலும்  இடம் கிடையாது..

தாலி கட்டும்போதும் அறுக்கும் போதும் மட்டுமே இடம் தருவார்கள்
(எங்க சாதியில் இப்படி செய்வோம் அப்படி செய்வோம் என்பார்கள்)

மற்ற நேரங்களில் use and throw cup தான்..

(மருத்துவர், என்ஜினீயர்,கலெக்டராக,etc இருந்தாலும்)

எந்த ஆணாவது பெயருக்கு பின்னால் தேவதாசி என்று வைத்துள்ளானா ?
தேவதாசியின் மகனாக இருந்தாலும் வைக்க மாட்டான்..

ஆனால் தேவதாசியின் மகள் தேவதாசி என்று தான் அழைக்கப்பட்டாள்..

(தற்பொழுது காலம் மாறிவிட்டது என எண்ண வேண்டாம் டிக் டாக்(tik tok) முழுவதும் பெண்கள் சாதி பெருமை பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் , அதில் ஒரு தேவதாசியின் மகளை கூட நான் காணவில்லை காரணம் அது ஒழிக்கப்பட்டுவிட்டது )

எங்கே போனது அந்த தலைமுறை வழக்கம் ஒரு நூற்றாண்டில் காணாமல் போனது..

அதுபோல் சாதிகளும் காணாமல் போகட்டும்..

(பெண்கள் சாதி பெயரை தங்கள் பெயருக்கு பின்னால் பயன்படுத்திவிட்டு அதை அவர்களின் குடும்ப பெயர் என்று சொல்லும்போது , என் சிந்தனை இப்படி தான் ஓடும் )

"வர்ணாசிரமே ஆண்கள் செய்யும் தொழிலை குறிக்க வகுக்கப்பட்டது .
ஆனால் அதை இன்றுவரை தன் கருப்பையில் பெண் தான் சுமக்கிறாள்"

Krishna Kumar G


No comments:

Post a Comment