Truth Never Fails

Thursday, June 13, 2019

வாழட்டும் சாதிகள்

 வாழட்டும் சாதிகள்:


தலைமுறைகள் கடந்தாலும் சாதிகள் வாழ வேண்டும்..


 சனாதன தர்மம் தொடர வேண்டும்..


பாவும் இதை வைத்து தான் பலர் பிழைக்கிறார்கள்..


இதை ஒழித்துவிட்டால் அவர்கள் எங்கே போவார்கள்

யார் தயவை நாடுவார்கள்..?


நாம் தமிழர்கள் என்று பேசினாலும் சாதி என்று வரும்போது 

அதன் அடையாளத்தை காட்டி பெருமை பேசி மற்றவர்களை இழிவு படுத்தலாம் .


உறங்கிக்கொண்டு இருக்கும் சாதிகளின் தனலை மூட்டி அனல் பரவ செய்து குளிர் காய புது வழிகளை நாடிக்கொண்டே இருக்கலாம்..


யார் குடி கெட்டால் என்ன நாம் வாழ வேண்டும்..

யார் மீது வாழக்கு பாய்ந்து சிறை சென்றால் என்ன

நாம் உறங்க வேண்டும்..

என்று சாதிய மோதல்களை தூண்டிவிட்டு நிம்மதியாக நம் பிழைப்பை பார்க்கலாம்..


யாரோ பேசிவிட்டான் அல்லது ஏதோ செய்துவிட்டான் என்பதற்காக..

ஊரையே திரட்டி வந்து இன்னொரு ஊரை அடித்து உடைத்து சூறையாடி செல்வதில் ஒருவகை மகிழ்ச்சி கொள்ளலாம்..


கல்வி கூடங்களில் ஒடுக்கப்பட்டவர்களை சூழ்ச்சிகள் செய்து மேலும் ஒடுக்கி நிம்மதியாக இருக்கலாம்


மேலும் யாராவது அறிவு பூர்வமாக பேசினால் அவனை இட ஒதுக்கீட்டில் வந்தவன் சலுகையில் வந்தவன் என்று கேலி பேச வேண்டும்..


உடன் படிக்கும் பெண்களை காதலித்துவிட்டால் அவன் ஏமாற்றிவிடுவான் நாடக காதல் கும்பலை சேர்ந்தவன் என்று பழி சுமத்தி அவர்களை பிரித்துவிட வேண்டும்.பின் அவனை கொலை செய்துவிட வேண்டும்..


 ஹிந்து மதத்தின் அங்கமாக இருக்கும் சாதிகளை ஒழிக்க யாராவது வந்தால் அவனை கிறிஸ்துவ கை கூலி.. கம்யூனிஸ்ட் அல்லது தேச துரோகி என்று சொல்லிவிட வேண்டியது தான்..


இப்படி எப்பேற்பட்டாவது சாதிகளை காப்பாற்ற போராட வேண்டும்..


சாதிகள் மேலும் ஆயிரம் ஆண்டுகள் வாழ வைக்க வேண்டும்..


வாழட்டும் சாதிகள்

ஒழியட்டும் மனிதம்..


++++++

#caste #வஞ்சப்புகழ்ச்சி 


Krishna Kumar G

No comments:

Post a Comment