Truth Never Fails

Monday, January 28, 2019

புது பென்சன் திட்டம்

 CPS திட்டம் வரும்போதே பலர் எதிர்த்தார்கள்,அதில் உள்ள ஒரே தவறு,அதில் உள்ள பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வார்கள் என்பதே.. 

வந்தா லாபம் போனா மயிரு


என்கிற அடிப்படையை தாரக மந்திரமாக கொண்டு,கொண்டுவரப்பட்டதே CPS எனப்பாடும் 

Contributory pension scheme.


பங்கு சந்தை என்பது அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு சூதாட்டம்..


உதாரணத்துக்கு மங்காதாவில் அரசு ஊழியர்களின் பென்சன் பணத்தை வைத்து சூதாடுவதைப்போல..


இது இந்தியா முழுவதும் உள்ள எல்லா அரசு துறைகளிலும் உள்ளது..

××××××


என் கருத்து என்னன்னா இனி பணியில் சேர்பவர்களுக்கு முழு சம்பளத்தையும் கையில் கொடுத்துடுங்க..

அவங்களுக்கு எந்த பென்ஷன் திட்டத்தில் விருப்பமோ..

அங்க அதில் நேரடியாக பணத்தை செலுத்தி பயனடையட்டும் ...


(குறிப்பு இனி அரசு பேஷன் திட்டத்தை செயல்படுத்த கூடாது)


LIC,HDFC ,ICICI பென்ஷன் திட்டங்களில் சேர்ந்துகொள்ளட்டும்..


(இப்படி தான் ஒரு அரசு நிறுவனத்தில் அதன் ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை கையில் கொடுக்க வழியில்லாமல் வங்கிகளில் ஆயுட்கால fixed டெபாசிட் செய்துவிட்டார்கள்.. அதிலிருந்து மாதம் மாதம் வட்டி மட்டுமே அவர்கள் கைகளில் கிடைக்கும்.. முழுபணமும் கிடைக்காது.. அந்த உரிய நபர் இறந்த பிறகே அவரது வாரிசுகளுக்கு முழு பணமும் கிடைக்கும், இதுபோல் வங்கிகளிடம் பேசி ஒரு வழிக்கு வரலாம் )


Idea 2:

(இதுவரை cps வழியாக உங்களிடம் பிடித்த பணம் என்று ஒரு demat கணக்கிற்கான பாத்திரத்தை அரசு ஊழியர்களின் கையில் கொடுத்துவிடுங்கள்.. ஆனால் நீங்கள் இதை பணி ஓய்வு பெறும் வரை எடுக்க முடியாது... என்று ஒரு வரையறை வையுங்கள்.. பின்பு நமக்கு நம்ம பணம் கிடைச்சிடும் என்கிற உத்தரவரம் அவர்களுக்கு கிடைத்துவிடும்..

இனி அவங்களாச்சி வங்கியச்சி.. ஆக அரசுக்கு தொடர்பே இல்லாமல் போய்விடும்)


#Tamilnadu #Governance 


Krishna Kumar G

Wednesday, January 23, 2019

சிறுதெய்வ வழிபாடு வரலாற்று நாயகன் வழிபாடு

 மதுரை வீரன்


தமிழ் தெய்வ வழிபாட்டை சிறு தெய்வ வழிபாடு என்று சொல்லிவிட்டார்கள்..


அப்போ பெரு தெய்வ வழிபாடு என்னான்னு கேட்டா 

சமஸ்கிருத தெய்வ வழிபாடு என்கிறார்கள்..


இது என் பாட்டி (அம்மா வழி) வீட்டில் எடுத்த புகைப்படம்..


அங்கு மதுரை வீரன் தான் முக்கிய தெய்வம்..


(தாய் வழியில் குல தெய்வ வழிபாடு பொருந்தாது என்பதால் நான் இவ்வளவு நாட்கள் இதை கவனிக்கவில்லை)


{தந்தை வழியில் புத்துப்பட்டு அய்யனார் (புதுவை அருகே உள்ள ஊர்) (ECR)}


இவையெல்லாமே தமிழ் தெய்வ வழிபாடுகளின் கீழ் வரும்..


 சமஸ்கிருத தெய்வங்களை வழிபாடுபவர்கள் இவைகளை சிறு தெய்வம் , அதாவது இவைகள் எங்கள் தெய்வங்களுக்கு கீழ் சிறு தெய்வங்களாக உள்ளது என்று ஒரு மாயை வரையறையை உருவாக்கி வைத்துள்ளார்கள்..


×××××


மதுரை வீரன் கதை உங்களுக்கு தெரிந்து இருக்கும்..

அதுவும் வரலாற்றில் பதியப்பட்ட ஒரு சாதிய கொலை தான்...


×××÷÷


இங்கு தமிழ் தெய்வம் என்று சொல்லப்படுவது அவதாரங்கள் அல்ல.. அது முன்பு வாழ்ந்து மறைந்த ஒரு வரலாற்று நாயகனை நினைவு கூறும் ஒரு நிகழ்வே வழிபாடாக கருதப்படுகிறது..


÷÷÷÷

குறள் 50:

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்

தெய்வத்துள் வைக்கப் படும்.


#Religion #Tamil 


புகைப்படத்தின் கீழ் ஒரு சாட்டை உள்ளது பாருங்கள்..

அது நான் சிறு பிள்ளையாக இருந்த போதில் இருந்து பார்க்கிறேன்..


Krishna Kumar G


Saturday, January 19, 2019

சிங்கள போர் சிகிச்சை

 10 ஆண்டுக்கு முன்பே இதே மாதம் அப்போலோ மருத்துவமனையில் கழிந்தது.. 


ஈழத்தில் நடக்கும் போர் பற்றி சரியான செய்தியோ தகவலோ தெரியாமல் இருந்தேன்.

2G GPRS மொபைல் வழியாக lankasri இணையதளத்தில் வரும் செய்திகளை படிப்பேன்..


ஒரு நாள் இரவு 10 மணிக்கு மேல் மருத்துவமனைக்கு திரும்பினேன்..


முன் கதவு அடைக்கப்பட்டு இருந்தது. 

(ஜெயா இருந்த போது எப்படி இருந்ததோ அப்படி)

எப்போதும் திறந்தே இருக்கும்..


ஆனால் அன்று மூடி இருந்தது..


அடையாள அட்டையை காட்டி வாசல் கதவு வழியாக நுழைந்தேன்..


ஆனால் மெயின் ப்ளாக் கதவு பூட்டப்பட்டு இருந்தது..

ஆள் நடமாட்டமே இல்லை..

வாசலில் ஒரு vip கார் கூட இல்லை.. 


சரி emergency வழியாக உள்ளே செல்லலாம் என்று சென்றேன்..


வழக்கமாக 4-5 ஆம்புலன்ஸ்கள் நிற்கும் ஆனால் அன்று ஒரு சுமோ கார் 

ஒரு கட்சி கொடியுடன் நின்றது..


அங்கும் ஆள் நடமாட்டமில்லை..


கதவை திறந்தேன்.. நேராக 4 லிப்ட் இருக்கும் ஆனால் இன்னும் அதற்கு 2 கண்ணாடி கதவுகளை திறக்க வேண்டும்.


அதுவும் பூட்டப்பட்டு இருந்தது..


சரி என்று இடதுபுறம் இலவச STD போன் ஒன்று இருக்கும் ..


அதன் அருகே சிறு கதவு இருக்கும்.. அதை திறந்தால் ஒரு சிறு அறை வரும் அதை தாண்டினால் மெயின் ப்ளாக் லாபி செல்லலாம்..


அதை திறந்தேன்.. 


அதிர்ச்சி ..இருட்டில்


50க்கும் மேற்பட்ட இலங்கை மக்கள்..

(உடை காட்டிக்கொடுத்தது)


பெட்டி படுக்கையுடன்.. சிலர் துணி முட்டையுடன் தரையில் அமர்ந்திருந்தனர்..

சிலர் சேறு காய்ந்த உடையுடன் இருந்தார்கள்..


என்னை எல்லாரும் பயத்துடன் பார்க்க எனக்கு பயம் வந்துவிட்டது..


சில இலங்கை இராணுவ வீரர்களும் இருந்தார்கள்..


கடகடவென கடந்து மெயின் லாபி வந்தேன்..


மெயின் லாபியில் யாருமே இல்லை..

இரவிலும் பரபரப்பாக இருக்குமிடம்.. ஒரு காபி ஷாப் இருக்கும்.. அதுவும் மூடி இருந்தது..

பார்மஸியும் மூடி இருந்தது..


லிப்ட் வேலை செய்யவில்லை..

அதை சுற்றி இருக்கும்

Slope வழியாக மேலே ஏறினேன்..

......


என் மண்டையில் ஓடியதெல்லாம்..

இலங்கையில் என்ன செய்தி என்பது தான்..


பலரை தொலைபேசியில் அழைத்து..

செய்தி பார்த்தீங்களா இலங்கை பற்றி ஏதாவது செய்தி இருக்கா என்று தொடர்ந்து கேட்டேன்..


எல்லாருமே ஒன்றுமில்லை என்றார்கள்..


மொபைல் செய்திகளில் தேடினேன்..அதிலும் ஒன்றுமில்லை..


நடந்ததை என் அப்பாவிடம் சொல்லிவிட்டு..


தூங்கிவிட்டேன்..


காலை எழுந்து வந்து ..கீழே பார்த்தேன்..


வழக்கம் போல் மருத்துவமனை இயங்கிக்கொண்டு இருந்தது..


எந்த தடயமும் இல்லை..

=======


வெளியே நின்ற அந்த ஒரு சுமோ வண்டி..

அதில் இருந்த அரசியல் கொடி..


யார் என்று சொல்லனுமா ?..


யார் யார் போரில் காயமடைந்து உயர் சிகிச்சை பெற சென்னை கொண்டு வரப்பட்டார்கள் ?


இவையெல்லாம் இரவில் நடந்தது..


எந்தெந்த கட்சிகள் இதற்கு உதவி செய்தது.?


÷÷÷÷÷


(ஏற்கனவே இந்த பதிவை சில ஆண்டுகள் முன்பு பதிவு செய்தேன்.. பிறகு அழித்துவிட்டேன்..

தற்போது 10 ஆண்டுகள் கடந்துவிட்டது.. )


(ஈழ போர் உச்சத்தில் இருந்த நேரம்)


#blog #Tamil #Srilanka 2009 to 2019


Krishna Kumar G

Friday, January 11, 2019

சித்தா நீ என்ன பித்தா ?

 சித்தர்கள் சமண ஆசிரியர்கள் :- பல துறைகளில் பல போதனை முதல் அதன் செயல்பாடுகள் வரை கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருந்தார்கள்.. 


இந்த சித்தர்களை அழித்தால் நாம் நம் ஆரிய கருத்தை உள்ளே திணிக்கலாம்..

என்கிற அடிப்படையில் சித்தர்களை கழுமரம் ஏற்றினார்கள்.. (சித்தரவதை)


சித்த நூல்களிலும் தங்கள் கருத்தியலை திணித்து..ஆரிய நூலாக மாற்றினார்கள்..


சித்தர்கள் அனைவருக்கும் கற்றுக்கொடுத்தார்கள்..

குலக்கல்வி முறை என்பது அவர்களிடம் இல்லை..


ஆரிய வருகைக்கு பின்பு..

குலக்கல்வி முறை வந்து.. ஒரு சாதிக்கே கல்வி கற்றுக்கொடுக்கப்பட்டது..


அந்த காலகட்டத்தில் சித்தர் போதனைகள் அழிய தொடங்கியது..


முகலாய வருகைக்கு பின்பு தான்..

மக்கள் குழப்ப நிலைக்கு வந்தார்கள்..

ஆங்கிலேயே வருகைக்கு பின்பு 

முற்றிலும் குழம்பினார்கள்..


இந்த குழப்பத்தால் குலக்கல்வி அழிக்கப்பட்டது அதன் நீட்சியாக ஆரியர்களும் தற்போது சித்தர்களை வழிபடுகிறார்கள்..


தற்போதுள்ள சித்த போதனைகள் எல்லாம் கொஞ்சம் நஞ்சம் எஞ்சி இருப்பவை.. (சித்த வைத்தியம் ..)

சித்தர்கள் கற்றுக்கொடுத்த இசை வடிவம் முற்றிலும் அழிந்துவிட்டது.. காரணம் அதன் தொடர்ச்சி இல்லாமை..


(உங்கள் சித்தம் தெளிந்தால் சரிதான்)


வரலாறும் அதை தான் சொல்கிறது..


இன்று போய் திருவண்ணாமலையில் சித்தர்களை தேடுகிறான்..

இருந்தால் தானே கிடைப்பான்..

அவனை பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே கழுமரம் ஏற்றிவிட்டார்கள்..


தற்போது ஆரியமும் சித்தர் முறையும் கலந்துவிட்டது.. ஹிந்து என்கிற பெயரால்..


எந்த சித்தராவது 

சமஸ்கிருதத்தில் பேசியுள்ளார்களா?


சித்தர்கள் தமிழ் மொழி பேசியவர்கள்..

சமஸ்கிருத வழிபாட்டுக்கும் அவர்களுக்கும் தொடர்பே இல்லை..


அவர்களை அழித்ததே சமஸ்கிருத வழிபாட்டு முறைகள் தான்..


இன்று இரண்டும் கலந்துவிட்டது...


சித்தா மருத்துவ கல்லூரி உள்ளது

National Institute of Siddha

அதை மேலும் விரிவுபடுத்தி பல துறைகளை உருவாக்க வேண்டும்..


சமஸ்கிருத கலப்பில்லாமல் pure சித்தர் முறைகளை (போதனைகளை) தேடி எடுக்க வேண்டும் அல்லது சமஸ்கிருதத்தில் இருந்து பிரித்து எடுக்க வேண்டும்..


சித்த வைத்தியம் = தமிழர்(தமிழ்) வைத்தியம் 

சித்தர் பாடல் = தமிழ் பாடல்


சித்த மதம் = தமிழ் மதம்


சமஸ்கிருதத்தில் அர்ச்சனை எதற்கு ?


நவபாசானம் என்பதை எவன் உருவாக்கினான்..

அதில் உருவான சிலைகளுக்கு சமஸ்கிருத அர்ச்சனை செய்ய அவன் யார்?


சித்தர் உருவாக்கிய மூலிகை சிலைகளுக்கு..

தமிழில் தான் பாடல்கள் ஒலிக்கப்பட வேண்டும்..


நான் எதைப்பற்றி சொல்கிறேன் என்று உங்களுக்கு தெரியும்..


இன்று சித்தர் என்றால் ஹிந்து என்கிறார்கள்..

சித்தர் காலத்தில் ஏது ஹிந்து என்கிற வார்த்தை..


#tamil #religion 


Krishna Kumar G