Truth Never Fails

Tuesday, November 27, 2018

யாளி மதத்தின்/அரசனின் அடையாளம்

யாளி (ஆளி) பற்றி நாம் நிறையவே கேள்விப்பட்டு எழுதியுள்ளோம்ம்.ம்

புது கோணத்தில்

ஆளி என்கிற சிங்கம் சைவ மதத்தை குறிக்கிறது..
யானை புத்த மதத்தை குறிப்பதாக..
பிரிட்டிஷ் ஆவணத்தில் உள்ளது..

ஆளி இனம்.. சிங்கம்
மீளி இனம்.. யானை
(அகநானூறு 381)

அப்போது ஹிந்து என்கிற வார்த்தை இல்லாததால்.. சைவர்கள்
ஆளி இனம் என்கிற வார்த்தையை பெருமையாக சொல்ல பயன்படுத்தி இருக்கலாம்..

இருந்தாலும் எனக்கு சரியாக தெரியவில்லை..
எனக்குமட்டுமல்ல பலருக்கும் சரியாக தெரியாது என்பதே உண்மை..

ஆனால் யாளி எப்போதும் யானையை அழிப்பது போலவே உள்ளது..
யானையின் தந்தத்தை சாப்பிடும் யாளி முதல் படத்தில்..
யானையை விழுங்கும் யாளி என பல கோணத்தில் சிற்பங்கள் உள்ளது..

யாளி என்கிற விலங்கே உலகத்தில் கிடையாது..
அது வாழ்ந்ததுமில்லை..

(டைனோசரஸ் படிமங்களை கண்டுபிடித்தவர்கள் யாளியை இதுவரை கண்டுபிடிக்கவில்லை..25000 ஆண்டுக்கு முன் யாளி வாழ்ந்தது என்பது பொய்)

(சீனாவில் உள்ள டிராகன் விலங்கு சிற்பமும் ஏதோ ஒரு அடையாளத்தை குறிக்கிறது.. அது அரசாக இருக்கலாம் அல்லது மதமாக இருக்கலாம்)

அது ஒரு அடையாளம்..

ஒரு மதம் இன்னொரு மதத்தை மேற்கொண்டதின் அடையாள சிற்பம்...

ஓடிசாவில் இருந்து தமிழகம் வரை உள்ள கோவில்களில் மட்டுமே இந்த யாளி உள்ளது..

கற்கோவில்களில் மட்டுமே உள்ளது..

கற்கோவில்கள் 800 AD க்கு பிறகே இங்கு உள்ளது..

யாளி சிற்பம் 3 விலங்குகளை கலந்து செய்துள்ளார்கள்..

இன்னும் இறங்கி பார்த்தால் சைவ சமய கோவில்களில் மட்டுமே யாளி உள்ளது..(not verified)

அதுவே யாளியை கொல்லும் குதிரை சிற்பம் வைணவ கோவில்களில் உள்ளது..

அதுவும் யாளி குதிரையை கொல்ல எத்தனிக்கும்போது ஒரு வைணவ வீரர் குதிரைக்கு கீழ் ஒளிந்து இருந்து தந்திரமாக அதன் உறுப்பில் குத்தி கொல்வது போலவும் அவருக்குப்பின் ஒருவர் குதிரையை தாங்கிப்பிடித்தப்படி  உள்ளார்..
சைவத்தை வேட்டையாடும் தந்திரத்தை சிற்பத்தில் வைணவர்கள் வடித்துள்ளதைப்போல் தெரிகிறது.

குதிரை வைணவ மதத்தை குறிக்கலாம்..
(Not verified)

ஏதோ ஒரு மனிதனை கொல்லும் யானை
யானையை கொல்லும் யாளி
யாளியை கொல்லும் குதிரை

மாற்றம் மதத்திலும் உண்டு
என்பதற்கு இதுவே சிறந்த உதாரண சிற்பங்கள்..

இந்தளவுக்கு எவனும் ஆராச்சி செய்து இருக்கமாட்டான்..

For photos https://m.facebook.com/story.php?story_fbid=1726763520763497&id=100002895981728

#blog #religion #india #China #dragon #Saiva #yali #Vainava #Horse # #buddha #Elephant

Krishna Kumar G

××××××××

3 Oct 2021 

ஆளி (யாளி) பற்றி சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பதிவு போட்டு இருந்தேன்..


அப்பொழுது எனக்கு தோன்றியது இது ஒரு குறியீடு ..

அது மதமாக இருக்கலாம் என்பது 


ஆனால் உண்மைக்கு அருகில் நெருங்கிவிட்டேன்..


அது மதமும் அதை சார்ந்த அரசனின் குறியீடு..


3ம் சோழனை சிறையிட்ட விழுப்புரம் மாவட்ட மலை ஒன்றில் இதே சிற்பம் உள்ளது.


பல்லவன் சிங்கமாகவும் (யாளி)

சோழன் யானையாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது ..


யாளி என்பது ஒரு குறியீடு என்பது உறுதியாகிறது.


பல இடங்களில் உள்ள யாளி யானையை விழுங்கும் சிற்பமும் இதை தான் குறிக்கலாம் ..

https://youtu.be/QmzXwsnEO7A

Tamil navigation என்கிற காணொளி பக்கத்தில் இந்த சிற்பத்தை காணலாம்..

(ஆனால் அது யாளி குறித்த பதிவல்ல)


இது சோழன் வீழ்ந்தை குறிக்கிறது

குறிப்பாக சொன்னால் யாளி/ஆளி சோழர்கள் வடித்த சிற்பத்திலும் கோவில்களிலும் காணப்பட வாய்ப்பில்லை.


யாளி/ஆளி Decoded 


++++++++

6 March 2023


யானையை கொல்லும் யாளி

யாளியை வேட்டையாடும் குதிரை 

குதிரையை கொல்லும் மனிதன் 

மனிதனை கொல்லும் தெய்வம்


இது ஞானத்தை தூண்டி 

மெய்யியல் கோட்பாட்டை குறிக்கிறது .

இது கோவில் சிற்பங்கள் வழியாக உவமையாக சொல்லப்பட்டுள்ளது .

ஒரு அரசனை கொல்ல இன்னொரு அரசன் வருவான் .








Friday, September 14, 2018

இரட்டை வேடம் போடும் அகஸ்தா

  இப்படியும் ஒரு கட்டு கதை இருக்கு..

சிவனின் உடுக்கையில் வலது புற ஓசை சமஸ்கிருதம் இடது புற ஓசை தமிழ் என்றும், சிவன் அகத்தியருக்கு தமிழ் கற்றுக்கொடுத்து தென் மாநிலங்களுக்கு அனுப்பியதாக 

ஒரு கட்டுக்கதை ஒன்று உள்ளது..


இந்த கதைக்குள் புனையப்பட்ட மற்றொன்று வர்ம கலை களரி சித்த வைத்தியம் இன்னும் பல அகத்தியரால் உருவாக்கப்பட்டது என்று..


இதைவிட கொடுமை இராமர் என்கிற இராமபுரான நாயகன் அகத்தியரிடம் உபதேசம் பெற்றதாகவும் உள்ளது..


அப்போ அகத்தியரின் timeline மிக பெருசா இருக்கே என்றால்..


அவருக்கு சாவே கிடையாது என்றும்..

அவருக்கு Time travel தெரியும் என்று ஒரு குரூப்பும்..


சொல்லிவர..


ஒட்டுமொத்த கணிப்பில்..


அகத்தியர் என்கிற ஒருவரை எல்லா இடத்திலும் பொருத்தி எவனோ திட்டமிட்டு சதி செய்துள்ளான் என்பது மட்டும் புரிகிறது..


 காரணம் அகஸ்திய முனி என்கிற ஒருவர் சமஸ்கிருத வேத புத்தகத்தில் வருகிறான்..


அவரை அப்படியே தூக்கி கொண்டு வந்து தமிழ் நூல்கள் கலைகளை உருவாக்கியவர் என்று பொருத்தி இருக்கிறார்கள்.. 


தொல்காப்பியரே அவர் மாணவர் தான் என்று சொல்லி..


தமிழே சிவனால் வந்தது என்றும் சொல்லி வைத்துள்ளார்கள்..


இதிலிருந்து என்ன தெரிகிறது..

 எவனோ ஒருவன் தான் இதை செய்துள்ளான்..


மிக பெரிய கிரிமினல் அவனாக தான் இருப்பான்.. ஒரு வரலாற்றையே மாற்ற முயன்றுள்ளான்.. 


பல ஆண்டுகளுக்கு பிறகு அவன் சமஸ்கிருதத்தையும் தமிழையும் கற்ற ஒருவன் தான் என்பதை மட்டும் தான் என்னால் கண்டுபிடிக்க முடிகிறது.. 


நல்லவேளை ஆசீவகம், சமணம் பற்றிய குறிப்புகள் இன்னமும் உள்ளது..


#blog #tamil #religion


Krishna Kumar G





Tuesday, September 11, 2018

திணை சமன்

 திணைகளை பற்றி ஒருசில தமிழ்த்தேசிய அரசியல்வாதிகள் பேசும்போது..

அந்தந்த திணை நிலங்களின் மக்களை சாதியாக பிரிக்கிறார்கள்..

அந்த திணையில் வாழும் சாதிகளுக்கு உரிய கடவுள் என்று ஹிந்து கடவுள்களின் பெயர்களை தமிழ் கடவுள் என்று குறிப்பிட்டு சமன் செய்கிறார்கள்..

இது தவறு..



ஆக திணை நிலத்தை குறிக்கும் என்பது சரி தான் 

ஆனால் கடவுளும் சாதிகளும் பிறகு விளக்கம் எழுதியவர்களால் இணைக்கப்படுகிறது..

ஒரு திணையில் ஆயிரம் கூட்டம் இருப்பார்கள் அவர்களுக்கு ஆயிரம் தெய்வங்கள் இருப்பார்கள்.

அதே திணைகள் காதலையும் காமத்தையும் குறிப்பதை பலர் குறிப்பிட தவறுகிறார்கள்..


#blog #tamil #religion


KRISHNAKUMAR

Tamil Coders Club

 விக்கிப்பீடியா: திருக்குறள் பக்கத்தில் ஹோலி (புனிதம்) குறள் என்று உள்ளது..

அதை நான் நீக்கி விட்டேன்..

நீங்களும் நீக்குங்கள்..


திருக்குறள் புனித நூல் அல்ல..

புனித குறள் என்று அதை அழைப்பது சதி.


எவனோ இதை திட்டமிட்டு செய்துள்ளான்..


அடுத்தது விட்டால் Hindu holy script என்று எழுதிவிடுவான்..


இப்படித்தான் ஒவ்வொரு தமிழ் சங்க கால இலக்கியங்கள் களவு போகிறது..


டிஜிட்டல் உலகில் உள்ள தவறுகளை அழியுங்கள்..


இதற்கான freelancer குழுக்களை உருவாக்குங்கள்..


Code படிச்சவன் கொஞ்சம் தமிழுக்கு வேலை செய்யுங்கள்..


தமிழ் coders என்கிற கிளப்களை உருவாக்குங்கள்..


கட்சிக்கு வேலை செய்வதை நிறுத்துங்கள்.. கொஞ்சம் தமிழுக்காக வேலை செய்யுங்கள்..

(10 காசு தேறாது, பணம் பதவியை எதிர்பார்க்காதவர்கள் மட்டுமே ஈடுபடவும்)


#blog #wiki


Krishna Kumar G







Monday, September 3, 2018

Love is not option

 காதல் வேறு திருமணம் வேறு என்கிற பழக்கம் இந்தியாவில் உள்ளது.

காதலே ஒரு உறவு தான் திருமணம் அதன் சடங்கு அவ்வளவு தான்..

நான் இங்கு சொல்வது இருதலை காதலை..

Love is also a relationship

Marriage is also a relationship

Love is not just time pass for needs

And marriage is not only real relationship.

Both are same

Marriage is just a ritual symbol and that's not mean it's only the true love. (only for Indian Marriages)


காதலை time பாஸ் என்று செய்யவே கூடாது..


அது இன்னொரு மனதை கொல்லும் செயல்..


ஒருவருடன் காதலில் இருக்கும்போது இன்னொருவரிடம் காதல் கொள்வதும் தவறு..(Cheating)

முறையாக பிரேக் up செய்துவிட வேண்டும்..


இதில் காமத்தை பற்றி பிறகு சொல்கிறேன்..

இதனுடன் சேர்த்து சொன்னால் குழம்பி விடுவீர்கள்..


கள்ளக்காதலை தடுக்கும் வழிகள் என்று ஏதுமில்லை..


அதை புறக்கணிக்க முடியவில்லை என்றால் விவாகரத்து என்று ஒன்று உள்ளது.

ஒரு உறவை முறையாக முடித்துவிட்டு இன்னொரு உறவை நாடுங்கள்..


இங்கு முடித்துவிட்டு என்றால் கொலை செய்துவிட்டு என்று பொருள் அல்ல விவாகரத்து செய்துவிட்டு என்று பொருள்..


ஆனால் காதலில் விவாகரத்து என்று ஒன்று இல்லை.. அது சட்டத்துக்கு அப்பாற்பட்டது..

ஒருவருக்கு நான்கு காதல் கூட அமையலாம்..

அவையெல்லாம் வெவ்வேறு கால கட்டத்தில் அமைந்தாலும் அல்லது ஒரே நேரத்தில் அமைந்தாலும் முன்னாள் காதலை முறையாக கைவிட்ட பின்பே அடுத்த காதலை நாட வேண்டும்..


இதை சட்ட ரீதியாக கண்காணிக்க யாருமில்லை தான் ஆனால் இதில் ஒரு வகை ஏமாற்றம் அடையும் இன்னொரு மனம் உங்களை சும்மா விடாது..

உலகின் நீதியும் சும்மா விடாது..


If you're in illegal affair 

If married get divorce legally

In love give a break up

(For current relationship) 


(I don't want to say about sex or one night stand at this time because it may confuse or divert you {for India})


Advice from a single

#blog


Krishna Kumar G


Sunday, August 5, 2018

நட்பு

 சந்தோஷ நேரங்களில் ஆயிரம் நட்புக்கள் வருவார்கள்.. கஷ்ட நேரத்தில் ஒரு சிலரே துணை வருவார்கள், அவர்களுக்கு துரோகம் செய்துவிடாதீர்கள்👍

Friday, July 27, 2018

தண்டிப்பதில் பாகிஸ்தான் முதலிடம் கிரிக்கெட்டிலும்

இம்ரான் கான்,வாசிம் அக்ரம் இந்த 2 பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களை எனக்கு பிடிக்கும்.முழு மூச்சுடன் விளையாடுவார்கள்.. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராவது வரவேற்க்க தக்கது..

இந்தியாவை விட பெரிய ஊழல் பாகிஸ்தானில் இல்லை என்றும் சொல்லலாம்..

கேவலம் பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட ஊழல் செய்திக்காக முன்னாள் பிரதமர் நவாப் ஷாரிப் சிறையில் உள்ளார்..

இதுவே இந்தியாவாக இருந்தால்?

இதற்க்கே பனாமா  பேப்பர்ஸ்சில் இந்தியர்களின் பெயரும் இருந்தது.. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..

உலக கோப்பை வென்று அந்த சிறு நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் இம்ரான்.. அவர் அந்த நாட்டின் பிரதமர் ஆவதில் தவறு இல்லை..

அங்கு நிலவும் தேர்தல் முடிவு குழப்பங்களை களைய இந்தியா உதவ வேண்டும்..

நம்மை விட கிரிக்கெட்டை அதிகம் நேசிப்பவர்கள் பகிஸ்தானியர்கள்..
அவர்களுக்கும் இந்திய வீரர்களையும் பிடிக்கும்..

இவையெல்லாம் யாகூ chat ரூம்களில் பேசும் போது தெரிந்துகொண்ட விஷயம்.. கிரிக்கெட்டை தவிர பாலிவுட்டை பற்றி மட்டும் தான் பேசுவார்கள்...

Saturday, July 14, 2018

Disaster drill for schools

 Disaster management drill is necessary for schools and colleges..

But not like this happened in kovai college..

It should be conducted with proper person with proper permission..


90% people don't know swimming in Tamilnadu..

It's a worse thing.. being living over a flood zones..


(நீங்க புள்ளி வைக்குறதுக்கு முன்னாடியே ரோடு போட்டு முடிச்சிடுவேன்)







சொந்தமில்லா விருந்து

 சென்றாயன் சொல்லுற கதை எனக்கும் நடந்து இருக்கு..


தினமும் இரவு கையேந்தி பவனில் சாப்பிட தொடங்கிய காலம் 2ரூ 1 பரோட்டா,

ஒரு நாள்

2 நண்பர்கள் ஏன் கிருஷ்ணா காசை வீணாக்குற..


(பக்கத்தில் பெரிய கல்யாண மண்டபம் இருக்கும்..)

அங்க தான் நாங்க போர் அடிக்கும்போது போய் சாப்பிடுவோம் நீயும் வா என்றார்கள்..


நான் பயந்துகொண்டு வர மறுத்துவிட்டேன்..


பிறகு அவர்கள் அடிக்கடி சாப்பிட்டுவிட்டு வருவதை கவனித்தேன்..


சில நாட்கள் கழித்து அவர்களுடன் ஒரு நாள் சென்றேன்.. நேரா சாப்பிட போய்டனும் யார்கிட்டயும் பேச கூடாது என்று அறிவுரை கூறி அழைத்து சென்றார்கள்..


பயங்கர பயமாகவும் நடுக்கமாகவும் இருந்தது.. தலையை குனிந்துகொண்டே சாப்பிட்டுவிட்டு வந்துவிட்டோம்..


அவ்வளவு தான் இதுக்கு ஏன் பயப்படுற.. என்று என்னை உற்சாக படுத்தினார்கள்..


பிறகு இன்னொரு நாளும் அப்படியே சென்றது..


சில நாட்கள் கழித்து 3ம் முறை ஒரு பாய் வீட்டு கல்யாணம் பிரியாணி போடுவாங்க போலாம் வா.. என்றார்கள் எனக்கு பயமாக இருந்தது.. 

ஏன்னா அங்கு குறைவாக தான் ஆட்கள் வருவார்கள்..

எல்லாருமே அவர்களுக்கு தெரிந்தவர்களாக இருப்பார்கள்..

நாம தானியா தெரிவோம்

நாம மாட்டிப்போம் என்றேன்..


ஏன் இப்படி பயப்புடுற.. நாங்க எத்தின பாய் வீட்டு விசேஷத்துல சாப்பிட்டு இருக்கோம்


 என்று எனக்கு ஆறுதல் சொல்லி அழைத்து சென்றார்கள்..


வழக்கம் போல உள்ளே நுழைந்து நேராக சாப்பிட சென்றோம்..


பாதி சாப்பிட்டு இருப்போம்..


ஒரு நபர் எங்களையே பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்து அவர்களிடம் சொன்னேன்.. 


ஒரு ஆள் நம்மள கண்டுபிடிச்சிட்டான் அப்படியே எழுந்து போய்டுவோம் என்று சொல்லி எழுந்தோம்..


அனால் அதற்குள் அந்த ஆள் வேகமாக எங்களிடம் வந்தார்..

நீங்க பெண் வீடா மாப்பிளை வீடா என்றார்..


இதை நாங்க எதிர் பார்க்கவே இல்லை..

3பேரும் முழிப்பதை பார்த்த அவர்..


எங்களை உட்கார சொன்னார்..

பிரியாணியை இலையில் வைத்தார்..

சாப்பிடுங்க என்றார்.. 


எப்படி சாப்பிடுவது ஒரே அசிங்கமாக இருந்தது..


சாரி சார் என்றோம்..


சாப்பிடாம 3 பேரும் வெளியே போக கூடாது என்று முறைத்து பார்த்துக்கொண்டே நின்றார்..


உணவு தொண்டை குழிக்குள் இறங்கவே இல்லை..

4 பீஸ் கறி வேறு வைத்துவிட்டார்..


மன கஷ்ட்டதுடன் சாப்பிட்டு முடித்தவுடன் அவர் மீண்டும் வந்து திருப்தியா சாப்பிட்டிங்களா என்றார்..

வேறு ஏதாவது வேண்டுமா என்றார்..

வேண்டாம் என்று

வெளியே வந்த பிறகு..

நண்பர்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது..


மீண்டும் ஏன் கிருஷ்ணா பயப்படுற இதுலாம் சாதாரண விசியம் என்றார்கள்..


பிறகு நான் இதுபோல் செல்லவே இல்லை..


எவ்வளவு ஆனாலும் காசு கொடுத்து தான் சாப்பிடணும்.. இதுபோல் செய்ய கூடாது என்பது என் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது..


இன்று பரோட்டா 10ரூபாய்..


#blog


(அந்த பாய் மீது தவறு இல்லை, அவர் சாப்பிட தான் வைத்தார்.. தவறு எங்கள் மீது தான் இருந்தது)


அழைக்கப்படாத விருந்து நமக்கு சொந்தமானதில்லை

சில நேரங்களில் அழைக்கப்பட்ட விருந்து கூட நமக்கு சொந்தமில்லை.


@krish

Wednesday, May 9, 2018

Don't force anyone

If you force people to believe what you believe in. Then people will fight back and people will win. You can't force anyone on your beliefs👍

Monday, April 16, 2018

உயர்கல்வியில் இடை நிற்றல் வன்மம்

உயர்கல்வியில் இடைநிற்றலை 100% தடுக்க வேண்டும்.
எந்த பேராசியரும் துறை தலைவரும் அல்லது பல்கலைக்கழக துணை வேந்தர் நினைத்தாலும் எந்த மாணவ மாணவியின் கல்வி ஆண்டின் காலகட்டத்தில் அவர்களை இடைநிற்றல் (சூழ்நிலையை உருவாக்குதல்-தூண்டுதல்) or Terminate செய்ய அதிகாரம் வழங்க கூடாது..

(இடைநீக்கம் வேறு இடைநிற்றல் வேறு..)
பொதுவாக அரசு கல்லூரிகளில் இதை செய்யமாட்டார்கள்
தனியார் சுய உதவி கல்லூரிகளில் இது மாணவர்களுக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது..

(இதில் சாதிய காரணங்களும் இருக்கிறது)

4 ஆண்டு படிப்பு என்றால் சரியாக நான்கு ஆண்டில் CC கொடுத்துவிடுங்கள்.. Arrears இருந்தால் மாணவர்கள் எழுத்திக்கொள்ளட்டும்..

நிர்மலா தேவி போன்றோர் உருவாக இது பெரு ஆயுதமாக உள்ளது.. Internal Practical என்று மிரட்டுவது எல்லாம் நடக்கவே கூடாது..

அடுத்து ஆராய்ச்சி படிப்புகளில் இதுப்போல் கொடுமைகள் பல நடக்கிறது.. இதனால் பல ஊழல்கள் அதில் நிலவுகிறது..

(இடைநிற்றலால் நாட்டின் பொருளாதாரமும் பாதிக்கப்படும்)

கல்வியை கற்பித்தலை சுலபமாகவும் user friendlyயாகவும் இருக்கும்படி மாற்றி அமைப்பது அவசியம்..

பல நாடுகளில் அப்படிதான் வைத்து இருக்கீறார்கள்..

வாரத்தில் 1 அல்லது 2 நாள் தான் கல்லூரி இருக்கும்.. அதுவும் மாணவர்கள் விருப்ப பாட வகுப்புக்கு செல்வார்கள் மீதி நாட்களில் வேலைக்கு செல்வார்கள்.. பாடத்தில் சந்தேகமென்றால் பேராசிரியரிடம் இணையம் வழியாக தொடர்புகொள்வார்கள்... (Regular course )

பேராசிரியர் நினைத்தாலும் அவர்கள் படிப்பில் கை வைக்க முடியாது.. என்ன கல்வி கட்டணம்  தான் அதிகமாக இருக்கும்..

மருத்துவ படிப்புகளை இந்த வரிசையில் நான் சேர்க்கவில்ல.. இது பொறியியல் கலை அறிவியல் படிப்புகளுக்கு இது பொருந்தும்..

Krishna Kumar G

Sunday, March 25, 2018

கம்மனாட்டியான இல்லுமினாட்டி

கம்மனாட்டி என்பவர்கள் 13 நபர்கள் அவர்கள் தான் உலகை ஆளுகிறார்கள் அவர்களுக்கு கீழ் தான் அனைத்தும் உள்ளது என்று யாராவது சொல்லிவிட்டு சென்று இருந்தால் அது தான் Youtube வாயில் வடை சுடும் பேச்சாளர்களுக்கு கிடைத்துவிட்ட பொக்கிஷம்..

இப்ப கம்மனாட்டிக்கு பதில் இல்லுமினாட்டின்னு மாத்திக்குங்க..
A என்று ஒன்று B என்கிற ஒன்று உள்ளது என்று வைத்துக்கொள்வோம் அடுத்து C என்பது இல்லை என்றும் வைத்துக்கொள்வோம்.. நமது Youtube பேச்சாளர்கள்  AB பற்றி மட்டும் தான் பேசுவார்கள் C பற்றி சிந்திக்க கூட மாட்டார்..

இந்த உலகில் எல்லாம் தவறாக நடப்பது போலவும் அதுவும் எல்லாம் தனக்கு எதிராக நடப்பது போலவும் கற்பனை செய்துகொள்கிறார்கள்.
போதாத குறைக்கு ஊடக வெளிச்சம் வேறு ...

தல சூப்பரா சொல்லுறீங்கன்னு ஏத்திவிட நாலு பேரு வேறு..

பார்க்க சிரிப்பாகவும் வேடிக்கையாகவும் உள்ளது..
..

Krishna Kumar G