Truth Never Fails

Friday, September 14, 2018

இரட்டை வேடம் போடும் அகஸ்தா

  இப்படியும் ஒரு கட்டு கதை இருக்கு..

சிவனின் உடுக்கையில் வலது புற ஓசை சமஸ்கிருதம் இடது புற ஓசை தமிழ் என்றும், சிவன் அகத்தியருக்கு தமிழ் கற்றுக்கொடுத்து தென் மாநிலங்களுக்கு அனுப்பியதாக 

ஒரு கட்டுக்கதை ஒன்று உள்ளது..


இந்த கதைக்குள் புனையப்பட்ட மற்றொன்று வர்ம கலை களரி சித்த வைத்தியம் இன்னும் பல அகத்தியரால் உருவாக்கப்பட்டது என்று..


இதைவிட கொடுமை இராமர் என்கிற இராமபுரான நாயகன் அகத்தியரிடம் உபதேசம் பெற்றதாகவும் உள்ளது..


அப்போ அகத்தியரின் timeline மிக பெருசா இருக்கே என்றால்..


அவருக்கு சாவே கிடையாது என்றும்..

அவருக்கு Time travel தெரியும் என்று ஒரு குரூப்பும்..


சொல்லிவர..


ஒட்டுமொத்த கணிப்பில்..


அகத்தியர் என்கிற ஒருவரை எல்லா இடத்திலும் பொருத்தி எவனோ திட்டமிட்டு சதி செய்துள்ளான் என்பது மட்டும் புரிகிறது..


 காரணம் அகஸ்திய முனி என்கிற ஒருவர் சமஸ்கிருத வேத புத்தகத்தில் வருகிறான்..


அவரை அப்படியே தூக்கி கொண்டு வந்து தமிழ் நூல்கள் கலைகளை உருவாக்கியவர் என்று பொருத்தி இருக்கிறார்கள்.. 


தொல்காப்பியரே அவர் மாணவர் தான் என்று சொல்லி..


தமிழே சிவனால் வந்தது என்றும் சொல்லி வைத்துள்ளார்கள்..


இதிலிருந்து என்ன தெரிகிறது..

 எவனோ ஒருவன் தான் இதை செய்துள்ளான்..


மிக பெரிய கிரிமினல் அவனாக தான் இருப்பான்.. ஒரு வரலாற்றையே மாற்ற முயன்றுள்ளான்.. 


பல ஆண்டுகளுக்கு பிறகு அவன் சமஸ்கிருதத்தையும் தமிழையும் கற்ற ஒருவன் தான் என்பதை மட்டும் தான் என்னால் கண்டுபிடிக்க முடிகிறது.. 


நல்லவேளை ஆசீவகம், சமணம் பற்றிய குறிப்புகள் இன்னமும் உள்ளது..


#blog #tamil #religion


Krishna Kumar G





No comments:

Post a Comment