Truth Never Fails

Friday, July 27, 2018

தண்டிப்பதில் பாகிஸ்தான் முதலிடம் கிரிக்கெட்டிலும்

இம்ரான் கான்,வாசிம் அக்ரம் இந்த 2 பாகிஸ்தான் விளையாட்டு வீரர்களை எனக்கு பிடிக்கும்.முழு மூச்சுடன் விளையாடுவார்கள்.. இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராவது வரவேற்க்க தக்கது..

இந்தியாவை விட பெரிய ஊழல் பாகிஸ்தானில் இல்லை என்றும் சொல்லலாம்..

கேவலம் பனாமா பேப்பர்ஸ் வெளியிட்ட ஊழல் செய்திக்காக முன்னாள் பிரதமர் நவாப் ஷாரிப் சிறையில் உள்ளார்..

இதுவே இந்தியாவாக இருந்தால்?

இதற்க்கே பனாமா  பேப்பர்ஸ்சில் இந்தியர்களின் பெயரும் இருந்தது.. அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை..

உலக கோப்பை வென்று அந்த சிறு நாட்டுக்கு பெருமை சேர்த்தவர் இம்ரான்.. அவர் அந்த நாட்டின் பிரதமர் ஆவதில் தவறு இல்லை..

அங்கு நிலவும் தேர்தல் முடிவு குழப்பங்களை களைய இந்தியா உதவ வேண்டும்..

நம்மை விட கிரிக்கெட்டை அதிகம் நேசிப்பவர்கள் பகிஸ்தானியர்கள்..
அவர்களுக்கும் இந்திய வீரர்களையும் பிடிக்கும்..

இவையெல்லாம் யாகூ chat ரூம்களில் பேசும் போது தெரிந்துகொண்ட விஷயம்.. கிரிக்கெட்டை தவிர பாலிவுட்டை பற்றி மட்டும் தான் பேசுவார்கள்...

No comments:

Post a Comment