Truth Never Fails

Saturday, June 29, 2019

சமூக நீதி காத்தவன்

 சமூக நீதி என்பது உலகம் எல்லாம் வேறு கோணத்திலும் இந்தியாவில் மட்டும் அவரவர் விருப்பப்படி வேறு கோணத்திலும் பயணிக்கிறது.


சமூக நீதி என்பது வெறும் வர்ணாசிரம அடிப்படையில் இட ஒதுக்கீடு பெறுவது என்பதில் இவர்கள் நிறுத்திக்கொண்டதைபோல் தெரிகிறது..


இதில் சாதி ஒழிப்புக்கு இடமே இல்லாதபடி செய்துவிட்டதைபோலும் தெரிகிறது..


மேலும் மேலும் இடஒதுக்கீடு விஸ்தீரம் அடைகிறதே தவிர சாதி பிரிவுகளை ஒழிப்பதற்கு ஒரு முயற்சியும் எடுக்கப்படவில்லை ..


தற்போதைய நிலைமையில்


சமூகநீதி காப்பவன் என்று சொல்லப்படும் நபர்கள் எல்லாம் சாதி சங்கம் நடத்தும் நபர்களாக இருக்கீறார்கள்..


சமுகநீதியின் சாரம்சமே சாதிகளை ஒழிப்பது என்கிற நிலையில் இருந்து தடம் மாறி..

தெருவுக்கு தெரு சாதிகளை ஒலிக்க செய்து வளர்ப்பது என்று மாறிவிட்டது..


#socialjustice #nocaste 


சமூக நீதி காத்தவன் என்கிற அடைமொழி கடைசியாக சாதிகளை ஒழித்த நபருக்கே பொருந்தும்..


அல்லது அதற்காக முனைந்த நபர்களுக்கே பொருந்தும்


இட ஒதுக்கீடு என்பது உரிமைக்கான தற்கால தீர்வு மட்டுமே..

அதையே பிடித்துக்கொண்டு இருக்க கூடாது..


அது மேலும் அடிமையாக்கும்..


(தற்போதைய சூழலில் உயர் சாதிகளும் இடஒதுக்கீடுக்குள் வந்துவிட்டது..

இட ஒதுக்கீடுக்கான அடிப்படை நோக்கமே முறிந்துவிட்டது)


Continue .....


#caste


Krishna Kumar G

Thursday, June 13, 2019

வாழட்டும் சாதிகள்

 வாழட்டும் சாதிகள்:


தலைமுறைகள் கடந்தாலும் சாதிகள் வாழ வேண்டும்..


 சனாதன தர்மம் தொடர வேண்டும்..


பாவும் இதை வைத்து தான் பலர் பிழைக்கிறார்கள்..


இதை ஒழித்துவிட்டால் அவர்கள் எங்கே போவார்கள்

யார் தயவை நாடுவார்கள்..?


நாம் தமிழர்கள் என்று பேசினாலும் சாதி என்று வரும்போது 

அதன் அடையாளத்தை காட்டி பெருமை பேசி மற்றவர்களை இழிவு படுத்தலாம் .


உறங்கிக்கொண்டு இருக்கும் சாதிகளின் தனலை மூட்டி அனல் பரவ செய்து குளிர் காய புது வழிகளை நாடிக்கொண்டே இருக்கலாம்..


யார் குடி கெட்டால் என்ன நாம் வாழ வேண்டும்..

யார் மீது வாழக்கு பாய்ந்து சிறை சென்றால் என்ன

நாம் உறங்க வேண்டும்..

என்று சாதிய மோதல்களை தூண்டிவிட்டு நிம்மதியாக நம் பிழைப்பை பார்க்கலாம்..


யாரோ பேசிவிட்டான் அல்லது ஏதோ செய்துவிட்டான் என்பதற்காக..

ஊரையே திரட்டி வந்து இன்னொரு ஊரை அடித்து உடைத்து சூறையாடி செல்வதில் ஒருவகை மகிழ்ச்சி கொள்ளலாம்..


கல்வி கூடங்களில் ஒடுக்கப்பட்டவர்களை சூழ்ச்சிகள் செய்து மேலும் ஒடுக்கி நிம்மதியாக இருக்கலாம்


மேலும் யாராவது அறிவு பூர்வமாக பேசினால் அவனை இட ஒதுக்கீட்டில் வந்தவன் சலுகையில் வந்தவன் என்று கேலி பேச வேண்டும்..


உடன் படிக்கும் பெண்களை காதலித்துவிட்டால் அவன் ஏமாற்றிவிடுவான் நாடக காதல் கும்பலை சேர்ந்தவன் என்று பழி சுமத்தி அவர்களை பிரித்துவிட வேண்டும்.பின் அவனை கொலை செய்துவிட வேண்டும்..


 ஹிந்து மதத்தின் அங்கமாக இருக்கும் சாதிகளை ஒழிக்க யாராவது வந்தால் அவனை கிறிஸ்துவ கை கூலி.. கம்யூனிஸ்ட் அல்லது தேச துரோகி என்று சொல்லிவிட வேண்டியது தான்..


இப்படி எப்பேற்பட்டாவது சாதிகளை காப்பாற்ற போராட வேண்டும்..


சாதிகள் மேலும் ஆயிரம் ஆண்டுகள் வாழ வைக்க வேண்டும்..


வாழட்டும் சாதிகள்

ஒழியட்டும் மனிதம்..


++++++

#caste #வஞ்சப்புகழ்ச்சி 


Krishna Kumar G

Monday, June 10, 2019

தெய்வங்கள் வளர்க்காத மதமும் சாதியும்

 வீர சைவர்கள் முன்னால் எங்கள் ஈர வைணவம் தோற்காது..


ராஜனுக்கு ராஜன் எங்கள் ரங்கராஜன் தான்..


×எழுதியவர் வாலி..

நடிகர் கமலஹாசன்..

படம் தசாவதாரம் 


கதை களம்..

சைவ மதத்தை தழுவிய சோழன்

வைணவர்களை கொலை செய்யும் காட்சி..

வைணவ கோவில் சிலைகளை அழிக்கும் காட்சி..


இன்றைக்கு ஸ்மார்த்தர்கள்

இதன் அர்த்தம் புரியாத ஹிந்துக்கள்..


இதைவிடுங்க

இன்னும் 2 விசயம் சொல்ல நினைக்கிறேன்..


சோழனின் வம்சம் என்றால் அவன் வைணவ கோவில்களுக்கு போக மாட்டான்..


உன்னுடைய குல தெய்வம் நேரடி சிவனாக இருக்க வேண்டும்..

(இல்லையா?)


மாறாக கருப்பசாமி,அய்யனார்,வீரன், பேச்சியம்மா etc என தமிழ் தெய்வங்களாக இருக்க கூடாது


தமிழ் தெய்வங்களை கும்பிடும் வழக்கம் உள்ளவன்


வைணவமும் அல்ல சைவமும் அல்ல..


நான் எந்த சாதி பெயரையும் குறிப்பிடவில்லை.. ஆனால் எந்த சாதியாக இருந்தாலும் நான் சொன்ன இந்த வரையறைக்குள் வைத்துவிடலாம்..


இன்று ஹிந்துக்கள் என  அனைவரையும் சொன்னாலும்..


இவர்கள் ஒரு காலத்தில் பரம எதிரிகளாக இருந்தவர்களே..


இடையே சமண மதம் வேறு..


இப்படி மத இன சண்டைகள் பல..


இன்று மற்ற சாதிகளில் அனைவரும் சைவர் வைணவர் என்கிற பிரிவினை இல்லாமல் கலந்து விட்டனர்..


ஆனால் பார்ப்பனர்களில் இன்னும் கலக்கவில்லை..


கலந்தவர்கள் ஸ்மார்த்தர்கள்..

நிஜ ஹிந்துக்களும் அவர்களே..


+++++


ராஜராஜ சோழன் தமிழன் என்றால்

ரங்கராஜனும் தமிழன் தான்..


ஆனால் மதங்களால் இவர்கள் எதிரிகள்..


இதை மொட்டையாக


தமிழன் தமிழனை அழித்தான் 

என்று சொன்னால் தவறு இல்லை..

அதுதான் வரலாற்றில் நடந்தது..


இதையே நுணுக்கமாக..

ஒரு சத்திரிய அரசன் வைணவ பார்ப்பனர்களை அழித்தான் ..


என்கிற உண்மையும் இதில் அடங்கும்..


அதை தான் கமல் காட்சி படுத்தி வெற்றியும் கண்டுள்ளார்..


++++


எப்பவுமே இதுபோன்ற விசியங்களை எப்படி கையாள வேண்டும்...

என்று மதியை பயன்படுத்த வேண்டும்..


பார்ப்பனன் சொன்னபோது வராத சர்ச்சை..


ஒரு தலித் சொல்லிவிட்டான் என்கிற போது வருவதன் உள்நோக்கம் என்ன?.


தமிழன் என்று சொல்லி வாக்குக்காக நாடாகமாடாதீர்கள்..

மக்கள் உங்கள் உள்நோக்கத்தை அறிவார்கள்..


மீம்கள் forward செய்பவர்கள்  

வரலாற்றில் வாழாதீர்கள்

10காசுக்கு பிராஜனமல்ல

இன்றைய உலகத்தில்

அனைவரும் ஒற்றுமையாக வாழ வழி தேடுங்கள்..


#caste #religion


I'm typing this with one hand and one eye.. in a blue display..

Because truth have to be said.. At time..


நீருக்குள்ளே மூழ்கினாலும் நீதி சாகாது!


Krishna Kumar G