Truth Never Fails

Monday, March 2, 2026

Silence the silencer

 எவனோ silencer alter செய்த வண்டியில் வேகமாக வரான் ..


என்று சிந்திப்பதற்குள் பெரும் சத்தம் எழுப்பும் இரு சக்கர வாகனத்தில் என்னை கடந்தான்..


காதில் வலியுடன் அவன் என் முன்னால் செல்வதை பார்த்தேன்..


அந்த சத்தத்தில் மிரண்டு போன மாடு ஒன்று சாலை ஓரத்தில் இருந்து ஓடி வந்து அவனை முட்டியது..


கீழே விழுந்தான்

நகை கடை தெருவில் இருந்த பெரும் கூட்டம் அவனை பார்த்து சிரித்தது..


மக்கள் யாரும் அவனை தூக்கவில்லை

அவனே எழுந்து தான் சென்றான்..


+++(++(


இந்தியாவில் பல பெரு நகரங்களில் silencer மாற்றி வாகனம் ஓட்ட முடியாது


ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் இது அதிகரித்து வருகிறது.


விலங்குகள் மிரண்டு தாக்கினால் தான் உண்டு..


இதுபோல வாகனத்தை வைத்துகொண்டு வனப்பகுதிக்கு சென்றால் கண்டிப்பாக யானை மிதித்தே கொன்றுவிடும்.

இதை தடுக்க வேண்டும் என்று நான் சொல்லமாட்டேன்


இஷ்டம் இருந்தால் தடுங்கள்..


ஒலிபெருக்கி ஒலி எழுப்பும் வாகன புகைபோக்கி



No comments:

Post a Comment