Truth Never Fails

Saturday, August 20, 2022

சாதியற்ற புதிய தலைமுறை உருவாகிறது

 "எல்லாரும் சமம் தானே டீச்சர்"


இப்படி பேசி ஒரு பள்ளிக்கூட ஆசிரியைக்கு பாடம் எடுத்து ஆப்பு வைத்தான் ஓரு பள்ளி மாணவன்.



"முகத்திலேயே சாதி எழுதி இருக்கும்"


இப்படி பேசி தனக்கு தானே ஆப்பு வாங்கிக்கொண்ட  பச்சையப்பன் கல்லூரி தமிழ்த்துறை தலைவி பேராசிரியை


2022 ம் ஆண்டில் இருக்கிறோம்..


மாணவர்கள் ஆப்பு வைக்கும் காலம்.


2002ல் நான் படிக்கும் காலத்தில் பேராசிரியர்கள் எவ்வளவு சாதிய வன்மத்தோடு இருந்தார்கள்..

அதை மாணவர்களுக்கு எப்படி புகுதினார்கள்..

என்று எண்ணி பார்க்கிறேன்..


தற்போதைய மாணவர்கள் சாதிக்கு அப்பாற்பட்டு இருக்கிறார்கள் என்பதை இந்த நிகழ்வுகள் வெளிப்படுத்துகிறது..

ஆனால் ஆசிரியர்கள் அதை புகட்ட முயல்கிறார்கள்

முடியவில்லை..


இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி புதிய தலைமுறையை உருவாக்க முடியும்.




No comments:

Post a Comment