தையில் அறுவடை நாள் கொண்டாடப்படுவதை போல..
சித்திரையில் சூரியன் மைய பகுதிக்கும் வரும் நிகழ்வை கொண்டாடப்படுவதை போல..
நாம் எப்படி நிலவின் நகர்வை கொண்டாடாமல் விட்டோம்
என்கிற சந்தேகம் வருகிறது ..
திங்கள் நகர்வை வைத்து நாட்கள் திகழி - திகதி - தேதி என தமிழில் உள்ளது..
திங்கள் நிலவாக
நாம் நிலவின் புத்தாண்டை ஏன் கொண்டாடாமல் விட்டோம்..
என்கிற கேள்வி என்னுள் ஒரு வாரமாக உள்ளது..
நம் நாட்குறிப்பும் வானியலும்
தெற்காசியா சீனர்களுடன் ஒற்றுபோகும் ஒன்று
அப்படி இருக்கையில்
அவர்கள் தையில் நிலவு புத்தாண்டை கொண்டாடுகிறார்கள்
நம்மிடம் ஏன் அந்த குறிப்பு இல்லை..
வெறும் தை அம்மாவாசை
சிவராத்திரி கொண்டாட்டங்கள்
மட்டுமே இதன் நெருக்கத்தில் உள்ளது..
இதில் எதையோ வழக்கு மாற்றி கொண்டாடாமல் இவர்கள் விட்டு இருக்கிறார்கள்.
நிலவு புத்தாண்டு மறந்துபோய் இருக்கிறோம்.
+++++++
இதை தேட போய் இன்னொரு விஷயம் அறிந்துகொண்டேன்.
சிவராத்திரி மதம் தாண்டி இன்னொரு விஷயத்தை வைத்துள்ளது..
சாப்பிடாமல் விரதம்
இரவில் கண் விழிப்பது
உடல் நிலை மாற்றத்திற்கான
இது ஒரு Re-start switch போல
Detoxification by fasting with awakeness
அந்த காலத்தில் வகுத்துள்ளனர்
என்பதனை அறிந்துகொண்டேன்.
புத்தாண்டுக்குள் நிலவு நுழைகிறது
மனிதன் தன் ஆற்றலை புதுபித்துக்கொள்கிறான்
என்கிற அடிப்படையில் இது இருந்திருக்கலாம்
காலப்போக்கில் இது மதத்துக்குள் புகுந்து இருக்கலாம்..
ஆனால் பழக்கம் அப்படியே தொடர்கிறது.