Truth Never Fails

Friday, April 29, 2022

சாமர்த்தியம் என சிக்கும் சிறுவர்கள்

 இந்த பையன் லோகேஷ் 5ம் வகுப்பு க்ளோரி பள்ளி.. கடலூர் பேருந்து நிலையத்தில் இருந்து

Lift கேட்டான் எங்கடா போற என்றேன்..

பாதிரிக்குப்பம் என்றான்..


அழைத்துக்கொண்டு வருகையில் பல கேள்விகள் கேட்டேன்..


வீடு எங்கே என ..

துக்குகினான் சாவடி என்றான்.

அது எங்கடா இருக்கு என்றேன்.


பேருந்து நிலையம் அருகே இருக்கு என்றான்..


அப்பறம் ஏன்டா பாதிரிக்குப்பம் போற என்றேன்..


அங்கே நண்பன் வீட்டில்  game விளையாட போறேன் என்றான்.

அப்பறம் எப்போ எப்படி வீட்டுக்கு வருவ என்றேன்..


9 மணிக்கு வருவேன்.

அப்படியே லிப்ட் கேட்டே வந்துடுவேன் என்றான்.


டேய் யாராவது உண்ண தூக்கிட்டு போய் வித்துட்டா என்னடா பண்ணுவ என்றேன்..


அஹ் ஆஹ் என்றான்..


வீட்டுல சொல்லிட்டியா என்றேன்

எங்க அம்மா கிட்ட சொல்லிட்டு தான் வந்தேன் என்றான்..


நான் சாப்பிடும் கடை வந்ததால் இறக்கிவிட்டு


புகைப்படம் எடுத்துக்கொண்டேன்..


இங்கு பதிகிறேன்..


துணிச்சல் தான் என்றாலும்..

சிறுவன் என்று பாவப்பட்டு லிப்ட் கொடுத்தேன்..

அவன் சாமர்த்தியமாக மக்களை ஏமாற்றுவதாக எண்ணி தன்னை பணயம் வைக்கிறான்.


No comments:

Post a Comment