Truth Never Fails

Saturday, March 18, 2017

ஆதி தமிழனுக்கு ஆண்டவன் யாருமில்லை

ஆதி தமிழன் ஆண்டவன் ஆனான் என்பதே தவறு
ஆதி தமிழன் அடிமையாக தான் இருக்கிறான்
வந்தேறி தமிழன் தான் ஆண்டவனானான்.

திராவிட நிலப்பரப்பில் இருந்துகொண்டு
தமிழ் திராவிட அரசியல் கட்சிகளை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு திராவிடத்தை தன் இருப்பிடத்தை எதிர்க்கிறார்கள் .
திராவிட நிலப்பரப்பில் இருக்கிற ஒரு மொழியை கையில் வைத்துகொண்டு அந்த மொழியின் முப்பாட்டன் ஆரியன் என்றால் எப்படி இருக்கிறது .
விநோதமாக இல்லை ?.


(ஆதி தமிழன் என்கிற சொல்லே இன்று சரியாக சொன்னால் மொழிவாரியாக பிரிக்கபடாமல் ஆதி திராவிடர் என்கிற ஒட்டுமொத்த தென் இந்தியாவின் திராவிட நிலப்பரப்புக்கான கீழ் நிலை ஜாதியாகவே இருக்கிறது, மற்ற மாநிலத்தில் அவர்களை திராவிடத்தில் இருந்து பிரித்து மொழிவாரி அடையாளம் கொடுக்கப்பட்டுள்ளது, தமிழக சட்டசபை இது குறித்து முடிவு எடுத்து "ஆதி தமிழன்" என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.)

தமிழகத்தில் வாழ்கிற இன்றைய "ஆதி திராவிடர் = ஆதி தமிழன்"

"ஆதி தமிழர்"
 மற்ற மாநிலங்களில் ஆதி திராவிடர்களை... ஆதி தெலுங்கர் , ஆதி கன்னடர் என்று அவர்கள் மாற்றி கொண்டார்கள் ....இன்னும் நாம் தான் மாற்ற வில்லை ..."ஆதி தமிழர்" என்று .... சட்டமன்றத்தில் மாற்றினால்  இந்த விவாதத்துக்கே இடம் இருக்காது



----------
பாகம் -2

அப்போ நீங்க உயர்ந்த ஜாதியான்னு கேட்டா ?
நாங்க நீங்க சொல்லுற மாதுரி கிடையாது,
சொல்லப்போனால் ஜாதியே கிடையாது, அது பாதியில் வந்தவன் யாரோ செய்த சதி.
இன்று அடிமைபோல் உரிமைக்காக கையேந்தி நிற்கிறோம்.

அப்போ தமிழன் என்கிற இன அரசியல் பேசுறியா என்றால் ?
அப்படியும் வைத்துகொள்ளலாம் .
ஆனால் அதுவே என் நோக்கமல்ல
அதுக்கும் மேல

இங்கு யாரையும் மீண்டும் கற்கால அரசியலுக்கு இட்டு செல்லும் நோக்கமல்ல ,தற்போது நடக்கிற சில அரசியல் சூழ்ச்சிகளை எதிர்கொள்ளும் காலத்தின் கட்டாயத்தில் இருக்கிறோம்.


உனக்கு சொன்னால் புரியாது

+krishna kumar G



No comments:

Post a Comment